பாற்கடல்...

இனியவை பிறக்கட்டும்...

மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தறாங்களாம்...

அன்பார்ந்த பெரி யோர்களே, தாய்மார்களே நண்டுகளே, சிண்டுகளே, குஞ்சுகளே, குளுவான்களே... உங்க எல்லாருக்கும் ஒரு விஷயம் சொல்லப் போறணுங்க...
தண்டோரா போடறப்போ இங்கேதான் உங்க கவனம் இருக்கணும். அதாவது நாளைல இருந்து மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்போறாங்க.
முதல்கட்டமாக 45 நாளைக்கு வீட்டுப்பட்டியல் கணக்கெடுக்கறாங்க. அப்புறமா... வர்ற 2011 பிப்ரவரி மாதத்துல முழுமையான கணக்கெடுப்பு.
தேசிய மக்கள் தொகை பதிவேடு ஒன்ன இந்திய அரசாங்கம் தயாரிக்குது. அதுல, எல்லா இந்தியர்களோட எல்லா விவரங்களும் சேர்க்கப்போறாங்களாம். கைரேகைல இருந்து கண் அடையாளம் வரைக்கும் தேசிய அடையாள அட்டையா பதிஞ்சு கொடுக்கப் போறாங்களாம்.
எனவே, அடுத்து வர்ற 45 நாளைக்கு உங்க ஏரியா பக்கம் வர்ற கணக்கெடுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கணுமுங்க. தப்பித்தவறி உங்க வீட்டுக்கு கணக்கெடுப்பாளர்கள் வரலைன்னா நீங்களே முன்வந்து யாரு கணக்கெடுப்பாளர்னு பாத்து, உங்களப் பத்தின தகவல்களை கொடுத்துருங்க சாமீ... 150 வீடுகளுக்கு ஒரு கணக்கெடுப்பாளர்னு உங்ககிட்ட 35 கேள்விக கேப்பாங்க.
அந்த கேள்விகளுக்கு மறைக்காம பதில் சொல்லுங்க. இன்னொரு சந்தோஷமான விஷயம் என்னன்னா? உங்களப்பத்தின தகவல்கள் எல்லாமே ரகசியமா வைத்துக் கொள்ளப்படும். தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கூட வேற யாருக்கும் சொல்ல மாட்டாங்க; சொல்லவும் கூடாது. அதுனால, தயவு செஞ்சு கணக்கெடுப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்க சாமியோ...வ்

1 comments:

இந்த தடவையாவது எல்லா விபரங்களும் சரியா எடுத்துட்டு போனா சந்தோசம் தலைவரே! :-)

உங்களை பதிவுலக நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்கிறேன்.

http://blogintamil.blogspot.com/2010/06/new.html

 

Post a Comment