பாற்கடல்...

இனியவை பிறக்கட்டும்...

பற்றி எரியும் சுயம்...


உனக்கும் எனக்குமான போரில்,
எனது வியூகத்தை தகர்க்க
உனக்கு சாத்தியமற்றுப் போனது.
உன்னை முன்னேற விடாமல்
தடுத்து விட்டது சுயத்தால்
பாதுகாக்கப்பட்ட என் சாம்ராஜ்யம்.
அகழி அடுத்த கற்சுவர்
உன் பிரவேச எண்ணத்தை
தேக்கியது.
என் சக பரிவாரங்களுடன்
போரிடவே உனக்கு
நேரம் போதவில்லை.
என்னை நேர் சந்திக்கும் பிரயத்னம்
பலனற்ற நிலையில்,
அனைத்து ஆயுதங்களையும்
கையிழந்தாய்.
சரணடைந்தேனும்
உட்புகுதல் என்ற கோரிக்கையும்
மறுதலிக்கப்பட்டது,
வெற்றிக் களிப்பில் நான்;
உன்னிடம் இருந்து
உதிர்ந்தன வார்த்தைகள்
"எல்லோரையும் போலத்தானே நீயும்'
அகழி தூர்ந்தது;
படை குலைந்தது;
கவசங்கள் நொறுங்கி,
நான் நிராயுதபாணியானேன்.
உன் அடுத்த தாக்குதல், போரை
முடிவுக்கு கொண்டு வந்து விடக்கூடும்.
ஆயுதப்பிரயோகத்தை நீ விரும்பவில்லை
இயலாமையும், ஏமாற்றமுமாய்
துயர மௌனத்துடன்
திரும்பினாய்.
அந்த வினாடியில் இருந்து
பற்றி எரிந்து கொண்டிருக்கிறது
என் சாம்ராஜ்யம்.

0 comments:

Post a Comment