tag:blogger.com,1999:blog-82471396986686664192024-02-21T05:53:24.718-08:00பாற்கடல்...இனியவை பிறக்கட்டும்...பாற்கடல் சக்திhttp://www.blogger.com/profile/07253897296826971596noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-8247139698668666419.post-72559282186855117792012-05-25T08:19:00.001-07:002012-05-25T08:19:42.372-07:00உயிர்ச்சரடு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpFDoVKuHInkPr0VfmGhXYRyZ9v615efFiLMzoWeAthHGCEUTzEUE9mXZK3BGZqZhja6eiuTQNz_T81eCfBZVdjEwCvZFVepEzLjoy045vXUth45EUZyeChXw3mMmvlhCIdUV18U3PJMmO/s1600/o_real_madrid_fondos-1735467.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpFDoVKuHInkPr0VfmGhXYRyZ9v615efFiLMzoWeAthHGCEUTzEUE9mXZK3BGZqZhja6eiuTQNz_T81eCfBZVdjEwCvZFVepEzLjoy045vXUth45EUZyeChXw3mMmvlhCIdUV18U3PJMmO/s320/o_real_madrid_fondos-1735467.jpg" width="319" /></a></div>
எனது இடது தோளில் பட்டுத் தெறித்தது<br />
மூன்றாம் தளத்திலிருந்த<br />
சாம்பற் புறாவொன்றின் எச்சம்<br />
அந்த வெண்ணிற நீரிழையுள்<br />
விதைகள் ஏதுமில்லை<br />
இருந்தும் வேர் பரப்பியது.<br />
இடக்கழுத்தின் நரம்பு துளைத்து,<br />
வலச்செவி நுழைந்து,<br />
நாசி வழிந்து,<br />
முதுகெங்கிலும் படர்ந்து,<br />
என்பு ஊடறுத்து,<br />
நாபி துளைத்து,<br />
குறி, குதம் எனப் பரவின வேர்கள்<br />
அக்குளிலும், சிரசிலும்<br />
மெல்லக் கிளைத்தது<br />
மரமொன்று.<br />
யுகம் யுகமாய்த் தொடர்ந்திருந்த<br />
உயிர்ச் சரடு அறுந்ததையெண்ணி<br />
விகசித்தன விருட்சங்கள்.
</div>பாற்கடல் சக்திhttp://www.blogger.com/profile/07253897296826971596noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8247139698668666419.post-67579809830979860922012-01-12T02:31:00.000-08:002012-01-12T02:37:53.930-08:00கதவு<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjP2m8v7uz5yuR_xDtqHW4sKoRs2JWPm27eemKG2gWh82FwfVCTQCcq4N880daGHH3Sm9H_8kDYxyMKhVgu5FcZ2UvbPcFAsk3OTK1gAcNj2soWrrap_t4qF1A-DvLeWr3uAtLawLn5rLUq/s1600/blue_old_wooden_door.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 214px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjP2m8v7uz5yuR_xDtqHW4sKoRs2JWPm27eemKG2gWh82FwfVCTQCcq4N880daGHH3Sm9H_8kDYxyMKhVgu5FcZ2UvbPcFAsk3OTK1gAcNj2soWrrap_t4qF1A-DvLeWr3uAtLawLn5rLUq/s320/blue_old_wooden_door.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5696692746123945906" /></a><br /><br /><br /> எப்போதிருந்து கதவுகளின் மீது எனக்குப் ப்ரியம் ஏற்பட்டது என்பதை என்னால் துல்லியமாகச் சொல்ல முடியாது. ஆனால், பதினொன்றோ, பனிரெண்டாம் வகுப்பிலோ கி.ரா.வின் ''கதவு'' சிறுகதையைப் படிப்பதற்கு முன்பிருந்தே கதவுகள் என்றால் எனக்குக் கொள்ளைப் ப்ரியம். முழுதாக மூடியிராத, ஒருக்களித்தபடி உள்ளே என்ன இருக்கிறது என்ற ஆவலை உந்தித்தள்ளும் விதத்தில் இருக்கும் கதவுகள் மேல் தனி வாத்சல்யமே உண்டு.விசும்பல்கள், சிணுங்கல்கள், மூர்க்கங்கள், மறுதலிப்புகள் என, எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு காலத்தின் மௌனசாட்சியாய் நின்று கொண்டிருக்கின்றன கதவுகள்.<br /><br />ஒருவேளை அப்பச்சியிடம் இருந்து கதவுகளின் மீதான காதல் எனக்குள்ளும் வந்திருக்கலாம். அப்பச்சியைப் பற்றிய பேச்சோ, அப்பச்சியின் பேச்சோ அதில் கதவு பற்றி ஏதாவது ஒன்று நிச்சயம் இருக்கும். ''பெரியப்பன் ஒத்தக்கால அண்டக் கொடுத்து நின்னுட்டா, 15 பேர் தள்ளுனாலும் கதவத் திறக்க முடியுமா'' என்பதுதான் அவரையும், கதவையும் இணைத்து நான் கேட்ட முதல் வாக்கியம்.<br /> <br /> முழுமையாக நரைத்த தலை. மேலே தூக்கிச் சீவியிருப்பதால், நடுவழுக்கை பெரிதாகத் தெரியாது. இருபுறமும் தூக்கி நிறுத்திய வெண்ணிற மீசையில் எலுமிச்சை நிறுத்தலாம் போலிருக்கும். தீட்சண்யமான கண்கள், சராசரியை விடக் கொஞ்சம் உயரம் குறைவு. ஆயுதம் இல்லாமல் ஐந்து பேரைச் சமாளிப்பாராம். ரெண்டு கையிலும் கம்பெடுத்து சுத்துனா கல்லு வீசினா, தெறிக்கும் என்ற தகவல் அவர் பற்றிய கூடுதல் மரியாதையை ஏற்படுத்தி இருந்தது. அப்பிச்சி வெளியே கிளம்பும் போது, அம்மத்தா கதவை ஒருக்களித்துப் பிடித்தபடி, அப்பச்சியை நேருக்கு நேர் பார்க்காமல், என்னென்ன வாங்க வேண்டும் என்று சொல்ல, அதைக் கேட்டும் கேட்காத மாதிரி ஒரு சிரிப்புடன் கிளம்பி விடுவார்.ஆனால், வரும்போது அமத்தா சொல்ல மறந்ததையும் சேர்த்தே வாங்கி வந்திருப்பார். அப்பிச்சியுடனான அமத்தாவின் பெரும்பாலான சம்பாஷணைகள், கதவைப் பிடித்துக் கொண்டுதானிருக்கும்.<br /><br /> அப்பிச்சி எந்த வீட்டுக்குப் போனாலும் கதவைத்தான் முதலில் பார்ப்பார். பார்க்கும் போதே என்ன மரம் என்பதையும், எவ்வளவு கனம் என்பதையும் சொல்லி விடுவார். பெரியப்பனுக்கு அப்படி கதவு மேல என்னதான் பிரியமோ தெரியலைப்பா என்பார்கள். இரட்டைக் கதவுகளை விட, அகலமான ஒற்றைக் கதவுகள் அவருக்கு அதிகமாகப்பிடிக்கும். கருகருவென வழவழப்பான மேற்பரப்புடன் கூடிய மர அலமாரி ஒன்று அவர் வசம் இருந்தது. சுவருடன் இல்லாமல் தனித்து இருக்கும்படியான அந்த அலமாரியின் கதவுகளின் அலங்கார வேலைப்பாடு வேறெங்கும் இருக்குமா என்பது சந்தேகமே.வேறு யாரிடமும் அதன் சாவியை அவர் கொடுத்ததே இல்லை. <br /><br /> தண்ணீர்த் தொட்டி அருகே போடப்பட்டிருந்த கயிற்றுக் கட்டலின் மீதிருந்தபடி யாரோ ஒருவரின் குடும்ப பிரச்னைக்கு மத்தியஸ்தம் செய்து கொண்டிருந்தார்.''கட்டில் பாதி, கதவு மீதி அதான்டே கலவி. தா(ழ்)ப்பா சரியில்லனா கதவு திறந்துதான்டா இருக்கும். எல்லாஞ்சரியின்னுஞ் சொல்ல முடியாது! எதுவும் தப்புன்னுஞ் சொல்ல முடியாது. பாத்து நடந்துக்க என்றபடி, அவன் தோளைத் தட்டியபடி சமாதானம் செய்தார். அடுத்த வாரத்திலேயே அவன் கோவித்துக் கொண்டு போன பெண்டாட்டியை திரும்ப அழைத்து வந்து, அப்பச்சியிடம் பேசிக் கொண்டிருந்து விட்டுப் போனான்.<br /><br /> அது என்னங்க அப்புச்சி, ‘கட்டில் பாதி, கதவு மீதி எனக்குப் புரியலயே என்றேன். புரியும்போது புரியும்டா பேராண்டி என்றவர் சிரித்தபடியே மீசை ஒதுக்கினார்.ஒரு மகாளாய அமாவாசை தினத்தன்று அவர் புகழுடம்பு எய்தினார். அவரை மண்ணுக்குக் கொடுத்து விட்டு திரும்பி ஆசாரி வீதி வழியே நடந்து வந்து கொண்டிருந்த போது, பொன்னையா ஆசாரி சம்சாரம் தனம்மா விசும்பிக் கொண்டிருந்தது என் காதில் மட்டுமே விழுந்த மாதிரி இருந்தது எனக்கு.பாற்கடல் சக்திhttp://www.blogger.com/profile/07253897296826971596noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8247139698668666419.post-12660757028706818472011-10-20T04:01:00.000-07:002011-10-20T04:03:36.994-07:00மரித்துப் போன சொற்களைப் பதப்படுத்தியவன்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEinnVNKUnm1jjqpMoFcvnXE5f3wUOObGWPkwsuQECGD2kLRZpwRyR-CuB_Qn9Byuy2XZYZY-86QhDluajfsSqQime_nZ-mBTluh-_uwKMND_HtVj4WNKaxdgZUGe4_gtR3NcCJlgFsA78ol/s1600/alone_by_buaiansayapanomali.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEinnVNKUnm1jjqpMoFcvnXE5f3wUOObGWPkwsuQECGD2kLRZpwRyR-CuB_Qn9Byuy2XZYZY-86QhDluajfsSqQime_nZ-mBTluh-_uwKMND_HtVj4WNKaxdgZUGe4_gtR3NcCJlgFsA78ol/s320/alone_by_buaiansayapanomali.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5665528263682762978" /></a><br /><br />சகி,<br /><br />ரணத்தில் இருந்து குருதி ஒழுக, நகர்தலுக்கான சாத்தியக்கூறுகள் முடங்கிப் போய்விட்ட, நினைவுகள் தப்பிப் போகும் முன்னரே உறுப்புகள் புசிக்கப்படுவதை உணரும், வேட்டையாடப்பட்ட மிருகத்தின் அவஸ்தை எனக்குள். முனகக்கூட திராணியற்றுப் போய்விட்ட அம்மிருகத்தைப் போலவே என் வார்த்தைகளும் பிய்த்தெறியப்பட்டிருக்கின்றன அல்லது உருத்தெரியாமல் சிதைக்கப்பட்டிருக்கின்றன.<br /><br /> உனக்கு நினைவிருக்கக்கூடும் பதின்ம வயதில் சக, எதிர்பால் ஈர்ப்புக்காக மற்றவர்கள் மெனக்கெட, எனக்கான ஆயுதமாக சொற்களைக் கூர்தீட்டிக் கொண்டிருந்தேன். நுட்பமும், சிலேடையும், ரஸமும் மிக்க சொற்களால் என்னை நிரப்பிக் கொண்டிருந்தேன் அவற்றில் சிலவற்றை பிரயோகிப்பதே எனக்குப் போதுமானதாக இருந்தது. செறிவு மிக்க சொற்களாலேயே என்னைத் தகவமைத்துக் கொண்டதாக, அப்போது எனக்குப் பட்டது. சதா சொற்களிலேயே களமாடிப் பழகி விட்ட பின், சொப்பனங்கள் கூட சொற்களால் நெய்யப்பட்டிருந்தன. அகங்கைக் குழியில் தேக்கப்பட்ட எண்ணெய், அதீத கவனத்தையும் மீறி விரலிடுக்குகள் வழியே கசிவதைப் போல, எனக்குள் சொற்கள் கசிந்து கொண்டிருந்தன. ஆனால், எனக்குத் தெரியும், என்னை உன்னில் அனுமதிக்க அவை ஒரு காரணமாக இல்லை என்பது. உனக்குச் சொற்கள் பற்றி எவ்வித அக்கறையும் இருந்ததாக என் நினைவில் இல்லை. சூலுற்ற சோளப் பயிர் வாசத்தைப் போல, விவரணத்துக்கு அப்பாலான வாசனையை உன் சொற்கள் கொண்டிருந்தன. அருகிருந்த பொழுதுகளில், உன்னை விட உன் சொற்களை நான் கவனித்ததை, நீ கவனிக்காதது போல் அவதானிப்பாய். <br /><br /> சொல்லரங்குகளின் முடிவில் என் பெயர் பிரதானப்படுத்தப்படும் போதெல்லாம், உன் இதழ்கள் இடது புறமாய் சற்றே நகர்ந்த பின் இயல்பாகும். பொருள் காண முடியா அப்புன்னகையைச் சந்திக்க நேர்கையில், அந்த குறுகுறுப்பு... ம்ச்சு. நிராயுதபாணி எதிரியை வெல்லவும் முடியாமல், பின் வாங்கவும் தோன்றாமல், கொன்றுவிடமாட்டானா என ஏங்கும் மன நிலையில் இருப்பானே, அப்படித் தோன்றுமெனக்கு. இளவேனிற் காலத்து மதிய நேரமொன்றில் உன் தோட்டலிருந்தோம். தாத்தாப்பூ தலைகளைக் கொய்தபடி, வரப்பில் முழந்தாளின் மீது தாவாய்க்கட்டையை ஊன்றியபடி நீ மவுனித்திருந்தாய். திடீரென என் தலைபற்றி விரல்களால் அளைந்தபடி, உதடு பிரித்தாய்; சொற்கள் பிரவகித்தன. நீ பேசியதின் துவக்கம் நினைவில் இல்லை எனக்கு. ஆனால், மணலோடிய கால்வாயில் பாம்பின் தடம் கூட, அடிவயிற்றை இழுக்குமே அந்த உணர்வு இருந்தது. யாரிடமும் அதிர்ந்தோ, வியாக்கியானமாகவோ பேசியறியாத/அறியப்படாத நீ அன்று பேசியவை, முதிர்ச்சி மிக்க உழவன் ‘விலா பிரிக்கும் லாவகத்துடன் இருந்தன.<br /><br /> பின்னான நாட்களில் அப்படி ஒரு பிரிவு வருமென எதிர்பார்க்கவில்லை இருவரும். ஒருவேளை நீ எதிர்பார்த்திருக்கக்கூடும். அந்த வாக்குவாத நேரங்களில் என்னை மிகவும் தற்காத்துக் கொண்ட போது, உன் சொற்களை என்னால் எதிர்கொள்ளவே இயலவில்லை என்பது உனக்குத் தெரியுமா? இன்றும் கூட என் ஒவ்வொரு அணுவிலும் அந்தச் சொற்கள் சதா ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. கனவில் அம்மாவை நரி இழுத்துச் செல்கையில் அழும் குழந்தை போல, பின்னரவில் என் முகம் கோணுவதை மற்றவர்களிடம் இருந்து மறைக்க, என் சொற்சேகரங்கள் உதவுவதில்லை.<br /><br />சின்னாட்களுக்கு முன், அதை நான் கேள்விப்பட்டேன். ‘கலகலன்னு பேசிட்டே இருப்பா! இப்பல்லாம் யார்கிட்டயும் பேசறதே இல்ல அதுவும் கல்யாணத்துக்கப்புறம் பேசாமடந்தை ஆயிட்டா என்று. <br /><br /> என் சேகரச் சொற்களில் பெரும்பாலானவை மரித்து விட்டன; பதப்படுத்தி வைத்திருக்கிறேன். அவற்றை விற்றுப் பிழைப்பவனாக இருக்கிறேன். உன் இறுதிச் சொற்களை உயிர்ப்புடன் சுமந்தவாறு.பாற்கடல் சக்திhttp://www.blogger.com/profile/07253897296826971596noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-8247139698668666419.post-77893383925701426422011-05-10T06:25:00.000-07:002011-05-10T06:28:20.840-07:00களி கூறல்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2w-9mhf4GOhbY9uIE3T7JbaJhlKtpWwOn3XV8YtdDN02J7jUIzvIuA9OpioKKnYHLe0ZVoPU7a1iviaoIsKMFWATOGmqmyIIcOrIjPnmzycdwuERXbzYEgXfKXuJHW_74nnMyu9kbRl6V/s1600/new-born-baby-on-towel.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2w-9mhf4GOhbY9uIE3T7JbaJhlKtpWwOn3XV8YtdDN02J7jUIzvIuA9OpioKKnYHLe0ZVoPU7a1iviaoIsKMFWATOGmqmyIIcOrIjPnmzycdwuERXbzYEgXfKXuJHW_74nnMyu9kbRl6V/s320/new-born-baby-on-towel.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5605078688207484242" /></a><br />திங்களின் முகமும் கொண்டு<br />திருமகளாய் வந்த தேவி,<br />பெற்றங்கள் நிறைந்த இல்லம்<br />பீடுடன் வாழ்வது போலும்<br />சுற்றங்கள் மகிழ எம்இல்<br />நல்லறம் புகுந்த மாது,<br />நனிபசும்பாலைப் போல<br />நற்சுவை தன்னைச் சேர்த்து<br />நல்லரும் வாழ்வே போந்தாள்.<br />பாணரும், பாடினியரும்<br />தமிழ்மிகு புலவோர் தாமும்<br />சாற்றிய தேன்கவிகள் கேட்டு,<br />அரும்பொருள், ஆடை, தங்கம்<br />நெல்வயல், நிரைகள் பிறவும்<br />தந்து புகழ் சேர்த்த மன்னர்<br />வீற்றிருந்தது கேட்டதுண்டு.<br />பாடல்பாடும் முன்னே<br />பரிசிலைத் தந்த பாவை தன்னை<br />அறிந்தவர் உளரோ யாரும்<br />எம்குலம் இனிது செழிக்க<br />வளமார் பொன்னி அன்ன<br />இன்னரும் புதல்வி தந்த தேவி,<br />நிலமகள் தன்னையாள<br />ஏறென ஆண்மகவு தன்னை<br />இனிதாய் எமக்குத் தந்தாள்<br />வேளிர் வேந்தன் தன்னை<br />வேழமென எமக்குத் தந்த<br />அன்னை அவர்க்கு, <br />என் சொல்லி நன்றி கூற<br />ககனமே வென்று வந்து, <br />கால்களில் வைத்த போதும்<br />இணையில்லை என்பதாலே<br />மாசற்ற தாள்கள் அதன்மேல்<br />கண்ணீரால் சிரித்து வைத்தேன்<br /><br /><br /><span style="font-weight:bold;">*குட்டி இளவரசனைத் தந்த<br />எம் ப்ரிய அண்ணிக்கு...</span>பாற்கடல் சக்திhttp://www.blogger.com/profile/07253897296826971596noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-8247139698668666419.post-52804793290559747442011-05-03T21:56:00.000-07:002011-05-03T21:59:24.084-07:00சாக்தம்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQbZgKFNsJRWS-FKuqCoSUW9aH8KcB-SsVGheNFFDh-U0aGaqmp9zdwfHqFLggrSsO2pZxZR_HMAAzOhah9vxxfDfrWvL3__MZot3HPk36l-2FSXWKq41B8Mg7P0eA_a7PQ2KnCA2F73jH/s1600/saraswati+painting.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 238px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQbZgKFNsJRWS-FKuqCoSUW9aH8KcB-SsVGheNFFDh-U0aGaqmp9zdwfHqFLggrSsO2pZxZR_HMAAzOhah9vxxfDfrWvL3__MZot3HPk36l-2FSXWKq41B8Mg7P0eA_a7PQ2KnCA2F73jH/s320/saraswati+painting.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5602720814608801490" /></a><br />அணிகளைந்து<br />ஆடையவிழ்த்து<br />பூ அகற்றிய பின்<br />ஊற்றிய நீர்<br />பிறைநெற்றிச் சாந்தழித்து<br />நேரிள கொங்கை நனைத்து<br />இடை வழிந்து<br />நாபி நிறைத்து <br />மேழி நிகர்த்த கால்கள் தழுவி<br />விரல்வழிச் சொட்டியது.<br /><br />ஆடவன் விரல்கள்<br />அங்கம் தடவின;<br />அலங்கரித்தன<br /><br />திரை விலகியதும்<br />தூர நின்று<br />தரிசித்த பெண்டிர்க்கு<br />ஆயிரம் கசைகள்<br />அணைந்து பிரிந்த<br />அவஸ்தையில்<br />தொடையிடுக்கியபடி<br />அருள்பாலிக்கத் துவங்கினாள் <br />முயங்குபூண் முலையம்மன்<br /><br /><br /><br /><span style="font-weight:bold;">சாக்தம்--சக்தி வழிபாடு<span style="font-weight:bold;"></span></span>பாற்கடல் சக்திhttp://www.blogger.com/profile/07253897296826971596noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-8247139698668666419.post-43705553145617471912011-03-18T00:02:00.001-07:002011-03-18T00:17:27.196-07:00கேப்டன் போட்ட டாஸ்சரியாய் இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஏறக்குறைய இதே தினத்தில் 23 /3 /2009 அன்று, லோக்சபா தேர்தல் நடக்கும் சமயம்; தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பற்றி ஒரு பதிவு எழுதி இருந்தேன்.<br />அப்போதைய நிலைக்கும், இப்போதைக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை. எனவே அதை மறு பதிவாக இடுகிறேன்.<br />சில விஷயங்கள் மாறுபடலாம். இருப்பினும் பதிவை மற்றவர்களின் பார்வைக்கு வைக்கிறேன்...<br /><br /><br /><br /><br /><br />பச்சையான சந்தர்ப்பவாதம். வேறென்ன சொல்ல. வழக்கமான அரசியல்வாதிகளைப் போலத்தான் தானும்;திராவிடக்கட்சிகளுக்கு மாற்று என்பதெல்லாம் வெறும் பாவ்லா என்பதை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார் தே.மு.தி.க.,<br />தலைவர் விஜயகாந்த்.தான் சந்தித்த முதல் சட்டசபை தேர்தலில் 8 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று தமிழக அரசியலில் தன்னை<br />முன்னிறுத்திக் கொண்டார் கேப்டன்(!?). இளைஞர்களை கவரும் விதத்திலான எளிமையான பேச்சு; இரண்டாம் கட்ட தலைவர்கள் இல்லாத போதும்,<br />திராவிடக்கட்சிகளுக்கு மாற்று என தன்னைக் காட்டிக் கொண்ட விதம் என்பன போன்றவற்றாலும்; இதுவரை வாக்களிக்கச்<br />சென்றிடாத சில சதவீத வாக்குகள் பதிவான போது, அது தே.மு.தி.க.,வுக்கு என மாற்றிக் கொண்டதும் அரசியலில் விஜயகாந்தின்<br />வளர்ச்சிக்கு காரணங்கள்.உண்மையில் இவையெல்லாம் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வரைதான். லோக்சபா தேர்தல் என்பதால், தமிழகத்தில்<br />புறம்தள்ளி விட முடியாத ஒரு கட்சி போல் தெரிந்தாலும், என்னைப் பொருத்தவரையில் அவர் மக்கள் தன் மீது வைத்த<br />நம்பிக்கையை இழக்கச் செய்து விட்டார் என்றே தோன்றுகிறது.குறிப்பிட்ட காலங்களுக்கு பின்னும்(நான்கு ஆண்டுகள்) அதே முறையிலான அரசியல் பேச்சுகள் மக்களை சலிப்படையச்<br />செய்துள்ளது. கடந்த சட்டசபைக் கூட்டத் தொடர் நடந்து கொண்டிருந்த போது, குட்டிக் கோடம்பாக்கத்தில்(பொள்ளாச்சி) "மரியாதை' பட<br />ஷூட்டிங்கில் பிசியாக இருந்தார். சட்டசபை கூட்டத்தொடருக்கு செல்லவில்லையா என்ற நிருபர்களின் கேள்விக்கு "இப்போது<br />தொழிலுக்காக வந்துள்ளேன். அதைத்தான் பார்க்கப் போகிறேன்' என திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.தொழில் முக்கியம் என்பவர் ஏன் அரசியலுக்கு வரவேண்டும்?கோவை விமான நிலையத்தில் வழிமறித்த செய்தியாளர்கள் , இலங்கைப் பிரச்னை குறித்து கேள்வி எழுப்பியபோது, பதில் எதுவும்<br />சொல்லாமல், "தொழிலை கவனிக்கவே வந்தேன் வேறேதுவும் கேட்க வேண்டாம்' என மழுப்பினார்.எல்லோரையும் போல அவருக்கும் திடீரென விழிப்பு வந்தது. ஈழத்தமிழர்களுக்காக மத்திய மாநில அரசுகள் எதுவும்<br />செய்யவில்லை. எனவே, லோக்சபா தேர்தலை புறக்கணிப்போம் என அழைப்பு விடுத்தார்(யாருக்கு?).தமிழினத்தலைவர் என அழைத்துக் கொள்ளும் கருணாநிதி ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்து விட்டார் எனத்துவங்கி, அப்பா<br />என மரியாதையாய்(!) அழைத்து வந்த கலைஞரை கடுமையாக விமர்சித்தார்.இறுதி வரை தனியாகத்தான் போட்டியிடுவேன்; மக்களை மட்டுமே நம்புகிறேன் என்று கூறி வந்தவர்; டெல்லியில்<br />காங்.,மேலிடத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதை நீங்கள் படிக்கும் போது அனேகமாக கூட்டணி உறுதி செய்யப்பட்டிருக்கலாம். பா.ம.க., மட்டுமே இப்போது விஜயகாந்த்<br />கூட்டணியில் சேர்வதற்கான "செக்'.பா.ம.க.,வுக்கு எதிரணியில் சேர்வதுதான் கேப்டனின் திட்டம். இரட்டை இலக்கத்தில் சீட் கோரி வரும் விஜயகாந்த் தனியாக<br />போட்டியிடுவேன் என்ற வார்த்தை தர்மத்தை மீறி விட்டார். மற்ற கட்சியினரை ஒண்டிக்கு ஒண்டி அழைத்தவர், அரசியல்<br />சதுரங்கத்தில் தானும் மக்களை வெட்டுக் கொடுத்து, தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் சாதாரண அரசியல்வாதி என்பதை<br />நிரூபித்து விட்டார்.ஒரு திரைப்படத்தில், "நான் வருவேன், வரமாட்டேன்னு பூச்சாண்டி காட்ட மாட்டேன். வந்தா உறுதியா வருவேன்' என பிரபல<br />நடிகரை தாக்கி "பஞ்ச்' டயலாக் பேசியவர், இப்போது, கூட்டணி இல்லை; நான் தெளிவா இருக்கேன்; கூட்டணி பத்தி மூன்று<br />நாட்களில் சொல்வேன்' என விளக்கெண்ணை வாதம் பேசி வருகிறார்.கேப்டன் எடுக்கும் முடிவை பொருத்தே அவர் கட்சியின் எதிர்காலம்(!) அமையும் கூட்டணியா இல்லையா என்பதை டாஸ் போட்டு பார்ப்பாரா கேப்டன்?பாற்கடல் சக்திhttp://www.blogger.com/profile/07253897296826971596noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8247139698668666419.post-84613443870121655802011-03-14T22:12:00.000-07:002011-03-14T22:18:11.716-07:00அசுண வேட்டை<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3U32er69IlEMBNrEiCcnbM_azk8fhKJJb0l1AnepGfr1IHtQdbVnYa5enRNCbD9MywJ5Kv-mB8S3JFgvsNfgszcwptT1l_I6FvZ90Wj-6GaxdZWdeU_j-wctPtxauNGqNnsldmjUlOUrb/s1600/66897-bigthumbnail.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3U32er69IlEMBNrEiCcnbM_azk8fhKJJb0l1AnepGfr1IHtQdbVnYa5enRNCbD9MywJ5Kv-mB8S3JFgvsNfgszcwptT1l_I6FvZ90Wj-6GaxdZWdeU_j-wctPtxauNGqNnsldmjUlOUrb/s320/66897-bigthumbnail.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5584170537635817474" /></a><br /><div>கனவுகளுக்கு அர்த்தம்</div><div>சொல்பவர்களைத்</div><div>தேடிக்கொண்டிருக்கிறேன்</div><div>உங்களுக்கேனும் தெரியுமா?</div><div><br /></div><div>யாருமற்ற மணல்வெளியில்,</div><div>நீலப்பெரு வெளி நோக்கி</div><div>ஊன்றப்பட்ட இரு ஏணிகளில்</div><div>ஒன்று குட்டை</div><div>மற்றது சற்று நெடிது.</div><div><br /></div><div>அதில் ஏற வேண்டும் எனக்கு</div><div>பற்றுக் கோடில்லா வெளியில்</div><div>அவைகளின் உயரம்</div><div>கட்டை விரல்களுக்கே போதா.</div><div>வாளிகளில் மொண்டு மொண்டு</div><div>நீருற்றினேன் ம்ஹூம்...</div><div>அப்போதும் வளரவில்லை அவை.</div><div><br /></div><div>சோர்ந்து போயிருந்த கைகள்</div><div>இறகென நீள்வதாகப் பட்டது.</div><div>ஆம் என் கழுத்து நீண்டு</div><div>மூக்கு அலகாகி</div><div>நான் இப்போது பறவையாகிருந்தேன்.</div><div><br /></div><div>வெறும் பட்சியல்ல,</div><div>இசை பிரித்தறியும் அசுணம்.</div><div>அப்போது அவன் வந்தான்</div><div>ராகத் தானியங்களை</div><div>வீசியபடி.</div><div>லயம் மாறா மொழிகளில்</div><div>லயித்திருந்தது மனம்</div><div><br /></div><div>ஏணியின் சட்டத்தில்</div><div>பற்றியிருந்த வளைநகம்</div><div>நழுவும் வேளையில்,</div><div>திடுமன முழங்கிய</div><div>பறை தாறுமாறாக</div><div>சப்தித்தது;</div><div>வீறிட்டது யாழ்.</div><div>பதைபதைத்து</div><div>என் உயிர் வழிகையில்,</div><div>தந்தி நரம்புகளை</div><div>முறுக்கேற்றி தெறிக்க வைத்த</div><div>அவன் கண்களில் தெரிந்தது</div><div>குரூரம்.</div><div><br /></div><div>கனவுகளுக்கு அர்த்தம்</div><div>சொல்பவர்களைத்</div><div>தேடிக்கொண்டிருக்கிறேன் நான்.</div><div><br /></div><div><br /></div><div><br /></div><div> </div><div><br /></div><div><br /></div><div><br /></div><div> </div><div><br /></div><div><br /></div><div><br /></div><div> </div><div><br /></div>பாற்கடல் சக்திhttp://www.blogger.com/profile/07253897296826971596noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8247139698668666419.post-35792352396697077722011-02-19T20:13:00.001-08:002011-02-19T20:14:13.164-08:00யானைகள் துரத்தும் கனவு<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgO0XJvd1kEpohS694JZmF3lmldmOv2mc-te0v-gcO_QHm4wbBWUJrfNOSYPkl7bGRF5rvUEYttlfrjRF-gV5uUip8-QEqjKGFsGia_ifwj13gcD-Zm2aQ-U14VQFbfLVUsX_qQIdEmJ7by/s1600/father_and_son.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 277px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgO0XJvd1kEpohS694JZmF3lmldmOv2mc-te0v-gcO_QHm4wbBWUJrfNOSYPkl7bGRF5rvUEYttlfrjRF-gV5uUip8-QEqjKGFsGia_ifwj13gcD-Zm2aQ-U14VQFbfLVUsX_qQIdEmJ7by/s320/father_and_son.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5575620158871878562" /></a><br /><div>முந்தைய நாள் இரவை</div><div>விழுங்கியிருந்த மழை,</div><div>இட்டேரி முழுக்க</div><div>மணற்கம்பளம் விரித்திருக்க,</div><div>என் உள்ளங்கையை</div><div>நிறைத்திருந்தது அப்பாவின்</div><div>சுண்டுவிரல்.</div><div>விரலிடையில் குறுகுறுக்க</div><div>மணல்வெளியெங்கும் </div><div>என் கால்தடத்தை</div><div>வாஞ்சையாய்ப் பதித்திருந்தார்.</div><div>முதல் பள்ளிப் பிரவேசம்</div><div>கண்ணீர் ததும்ப நான், </div><div>புன்னகையுடன் அவர் </div><div>நின்றது இன்னும் இருக்கிறது</div><div>நினைவில்.</div><div>எதிர்பாராத போது </div><div>கிணற்றுக்குள் தூக்கி வீசி,</div><div>தண்ணீர் குடித்து நான்</div><div>காற்றுக்குத் தவிக்க,</div><div>தலைமுடி பற்றி தூக்கிச்சிரித்து,</div><div>"புர்ரி' என்ற போது,</div><div>கழுத்தைக் கட்டிக் கொண்ட</div><div>நிமிடங்கள்.</div><div>கண்கள் விரிய அவர்</div><div>கதை சொல்லும் போது,</div><div>கனவுகளில் யானை துரத்தும்.</div><div>பொன்னியின் செல்வனை</div><div>அறிமுகம் செய்ததில்,</div><div>வந்தியத்தேவன் குதிரை</div><div>என் ஆதர்சம்.</div><div>இளவேனிற் பௌர்ணமி,</div><div>நட்சத்திர வானம்</div><div>என, ஒவ்வொன்றாய்</div><div>ஊட்டிவிட்டவர்,</div><div>ஒரு முறை அரிவாள் ஏந்தி</div><div>அய்யனாராய் நின்றார்.</div><div>"அவங்கூட வந்த பின்னாடி</div><div>எங்க வீட்டுப் பொண்ணு;</div><div>பாத்துட்டுப் போலாம், கூட்டிட்டுப்</div><div>போக நினைக்கக்கூடாது'</div><div>என்றபோது,</div><div>உறவுகள் உறைந்து நின்றன.</div><div>எனக்கு அவர் மகா சொரூபி;</div><div>அவரின் சுண்டுவிரலை,</div><div>தன் உள்ளங்கையில் </div><div>நிறைத்துக் கொண்டிருக்கும்</div><div>என் மகனைக்கேட்டேன்,</div><div>உனக்கு என்ன பிடிக்கும்?</div><div>"யானைகள் துரத்தும் கனவுகள்</div><div>பிடிக்கும்' என்றான் அவன். </div><div><br /></div><div><br /></div><div><br /></div><div><br /></div><div><br /></div><div><br /></div><div><br /></div><div><br /></div><div><br /></div><div><br /></div><div><br /></div>பாற்கடல் சக்திhttp://www.blogger.com/profile/07253897296826971596noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8247139698668666419.post-42429215358329208692010-12-29T20:07:00.000-08:002010-12-29T20:10:14.689-08:00இடந்தலைப்படுதல்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZHYql0KrYP7n0-w1C8XtVjSURMfmji230eVchEQuS9AwPtVLEgGIsBZSpke_1K0pf_l2qK9P_zbIS0uexhAyRg26O_7BP9OYqItFcJass4CppEr86QBX9iIpMupkIooQlHPWAt_KSBzxi/s1600/18257366_0f640c5881.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 250px; height: 188px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZHYql0KrYP7n0-w1C8XtVjSURMfmji230eVchEQuS9AwPtVLEgGIsBZSpke_1K0pf_l2qK9P_zbIS0uexhAyRg26O_7BP9OYqItFcJass4CppEr86QBX9iIpMupkIooQlHPWAt_KSBzxi/s320/18257366_0f640c5881.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5556322444847356706" /></a><br /><div style="text-align: left;"><b>முட்டுச்சந்து,</b></div><div style="text-align: left;"><b>முடைநாற்றத்துடன் </b></div><div style="text-align: left;"><b>கோணியே சுவராய் ஒரு மறைவிடம்,</b></div><div style="text-align: left;"><b>புளியமரம் புறங்கடை ஒதுக்கு,</b></div><div style="text-align: left;"><b>மேற்கூரையின் விரிசல்களுக்கிடையே</b></div><div style="text-align: left;"><b>பல்லிகளூரும் பாழறை...</b></div><div style="text-align: left;"><b>ஏதோ ஓரிடம்</b></div><div style="text-align: left;"><b>உராய்ந்து விட்டுப் போகிறது கழுதை</b></div><div style="text-align: left;"><b>சுவருக்கென்ன சுகம்?</b></div>பாற்கடல் சக்திhttp://www.blogger.com/profile/07253897296826971596noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-8247139698668666419.post-66181764352908464152010-12-19T22:35:00.000-08:002010-12-19T22:40:09.293-08:00அது சிவமாக இருக்கலாம்...<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj1-v2KzlfvTFFXD1zKN1PUeJDp1MaJZ0m8C89M4mIz5sLSdDe_lR5zfD7PdGzLEmy4oBYDl-C16r2V_ksAvWAH10QIwvJiMx_LHqZzzFzrT-Lq0gjGZ7L9zmzRY8MiEm3k8gSsZo5cu4H6/s1600/hindu-goddess-mother-kali.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 244px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj1-v2KzlfvTFFXD1zKN1PUeJDp1MaJZ0m8C89M4mIz5sLSdDe_lR5zfD7PdGzLEmy4oBYDl-C16r2V_ksAvWAH10QIwvJiMx_LHqZzzFzrT-Lq0gjGZ7L9zmzRY8MiEm3k8gSsZo5cu4H6/s320/hindu-goddess-mother-kali.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5552649787867491906" /></a><br /><div><br /></div><div>நில்!</div><div>கீச்சுக்குரலில் அதட்டியது சிவம்..</div><div><br /></div><div>வார்த்தை மீறியது குற்றமே</div><div>இனி இது நிகழாது,</div><div>தட்சயாகம் சம்ஹரித்த பின்</div><div>சக்தி கெஞ்சினாள்.</div><div><br /></div><div>முடியாது,</div><div>முரண்டு பிடித்தது சிவம்.</div><div><br /></div><div>முயற்சி மெய்வருத்தியும்</div><div>கூலி இல்லை; வெகுண்டாள் சக்தி</div><div>தனித்தியங்குவேன்</div><div>முரசு கொட்டினாள்.</div><div><br /></div><div>நானின்றி நீயா; ஒருக்காலும் நடவாது</div><div>கெக்கலித்தது சிவம்.</div><div>சக்தியில்லையேல் சகலமும் இல்லை</div><div>நீ சரசமாடக்கூட சக்தி தேவை,</div><div>எக்களித்தாள் சக்தி.</div><div><br /></div><div>அடி முடி காணவியலா ஜோதி நான்,</div><div>ஆங்காரமிட்டது சிவம்.</div><div><br /></div><div>முயன்ற இருவருமே ஆண்கள்</div><div>முடியாது என நான் புகலவில்லை,</div><div>அலட்சியப்படுத்தினாள் சக்தி.</div><div><br /></div><div>நான் நெருப்பு;</div><div>சகலத்திலும் தானாகும்</div><div>வல்லமை நெருப்புக்கு உண்டு</div><div>ருத்ரன் தாண்டவம் பூண்டால்</div><div>கிழியும் ககனம்</div><div>சகலமும் தகனம்,</div><div>சப்தித்தது சிவம்.</div><div><br /></div><div>ஹா...அக்னியின் வெம்மை நான்</div><div>நீங்கினால் குளிரும்</div><div>நேத்திரன் பெருமை,</div><div>குறும்பு கொப்பளித்தது சக்தியிடம்.</div><div><br /></div><div>சினம் கொண்டது சிவம்</div><div>தத் தித் தரிகிட தளாங்கு தரிகிட</div><div>தித் தித் தரிகிட தீம் தீம் தரிகிட</div><div>நாட்டியம் கைக்கொண்டு</div><div>நாரசாரமாய்க் கூவியது.</div><div><br /></div><div>சிவத்தின் தாண்டவக் கோலம்</div><div>கண்டஞ்சின பூதங்கள்;</div><div>மருண்டனர் மகரிஷிகள்</div><div>அக்கணம் கூடின</div><div>அனைத்துக் கணங்களும்</div><div>நிகழ்வின் சாட்சியாய்.</div><div>பிரேதச் சாம்பலும்,</div><div>பிள்ளையின் ஓடும் தெறிக்க</div><div>சிவ நடனத்தில்</div><div>காந்தல்.</div><div><br /></div><div>லாவண்யத்துடன்</div><div>லாவகம் காட்டினாள் சக்தி</div><div>கால் பாவினாள்,,நடந்தது நதி;</div><div>வீசினாள் கை,,அலைந்தது அனந்தல்;</div><div>விழுந்தது குழல்,,எழுந்தது கொண்டல்;</div><div>நிமிர்ந்தது நெஞ்சு,,உவந்தது வெற்பு;</div><div>அடவு காட்டினாள்,,அசைந்தது அருவி;</div><div><br /></div><div>நூபுர இசையில்..வெட்கியது யாழ்</div><div>உலவினாள்,</div><div>நின்றாள்,</div><div>மூழ்கினாள்,</div><div>பிரவகித்தாள், </div><div><br /></div><div>மொத்தத்தில்</div><div>சக்தி நெய்தது நாட்டியத் தறி</div><div>சடுதியில் கோணியது சிவத்தின் குறி</div><div><br /></div><div>ஊழித்தீயாய் உக்கிரம் சிவத்துக்கு</div><div>இடக்கால் கொண்டு</div><div>வலக்காது தொட்டு,</div><div>குண்டலம் கழட்டியது சிவம்</div><div>நான் பொன்னார் மேனி,</div><div>நீ காலுயர்த்த தெரியுமுன் யோனி</div><div>குரூரமாய்ச் சிரித்தது அந்தச் சவம்.</div><div><br /></div><div>ஆயினுமென்,</div><div>சன்னத்தமானாள் சக்தி.</div><div>அகிலம், அண்டம்</div><div>அனைத்துமே அழியும்</div><div>பொறுத்தருள்க,</div><div>குமரனின் நிலையும்,</div><div>குவலயத்தின் நிலையும்</div><div>என்னாவது?</div><div>இறைஞ்சின கணங்கள்.</div><div><br /></div><div>ரிஷிகளை நீங்கினர் பத்தினிகள்</div><div>கொற்றவை என்னும் கோலம் கொள்,</div><div>வேண்டினர் அவளை,</div><div>சாந்தம் கலைத்தது</div><div>சண்டமாருதம்;</div><div>கோர வாயில் குருதி ஒழுக,</div><div>விரிந்த சடை வெறியுடன் வீச,</div><div>ஆறிரு கரங்களில் ஆயுதம் தரித்து,</div><div>என்பு மாலை இடை வரை புரள</div><div>செவிப்பறை தன்னைத்</div><div>தமருகம் கிழிக்க</div><div>நிகழ்ந்தது ஆங்கோர்</div><div>சக்திதாண்டவம்.</div><div><br /></div><div>கொற்றவைக் கூத்தின்</div><div>குரூரம் கண்டு பதறியது சிவம்.</div><div>ஒரு முறை நான் "பிழை'த்ததால்</div><div>நீ பிழைத்தாய்</div><div>இம்முறை தாட்சாயினி</div><div>அல்ல; கொற்றவை நான்,</div><div>கர்ஜித்தாள்..</div><div><br /></div><div>இடக்காலுயர்த்தி</div><div>வலக்குண்டலமும்,</div><div>வலக்காலுயர்த்தி</div><div>இடக்குண்டலமும்</div><div>கழற்றி வீசினாள்.</div><div><br /></div><div>அந்தகாரம் சூழ்ந்தது</div><div>எங்கும் நிசப்தம்</div><div>எங்கோ கேட்டது ஈனக்குரல்</div><div>அது ஈசனின் குரல்</div><div>புலித்தோல் களைந்து,</div><div>சூலம் தொலைத்து,</div><div>பிறையினை பிடுங்கி</div><div>பித்தம் கொண்டது சிவம்</div><div><br /></div><div>மூன்றாவது கண்ணும்</div><div>சூனியம் வெறிக்க</div><div>கண்டது தின்று,</div><div>சொற்களை மென்று</div><div>உன்மத்தம் கொண்டு</div><div>திரிகிறது </div><div><br /></div><div>எதிர்ப்படும் பைத்தியம்</div><div>உதிர்க்கும் வார்த்தை</div><div>"<b>சக்தியை நீங்கிய சிவம்</b></div><div><b>உயிரை நீங்கிய சவம்</b>''</div><div>என்பதாக இருந்தால்,</div><div>உற்றுப்பாருங்கள்</div><div><b><span class="Apple-style-span" >அது சிவமாக இருக்கலாம்.</span></b></div>பாற்கடல் சக்திhttp://www.blogger.com/profile/07253897296826971596noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-8247139698668666419.post-67697153917660424802010-09-30T00:02:00.000-07:002010-09-30T00:04:35.896-07:00நினைவு(வ)றுத்தல்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZ3YKO-RGebRK7AG-yGgKf1HPLLMaB7Zd7-JQE7iCrOyfFK4wrgx9iMF9KbKity0QFD-IUvLiECndvF3oAY2xAt8N7_ppqmlOUckkkHn7V3uvlWaOc66TlBw9cbXgMEDagPQ6MozpmwzGr/s1600/images.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 192px; height: 262px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZ3YKO-RGebRK7AG-yGgKf1HPLLMaB7Zd7-JQE7iCrOyfFK4wrgx9iMF9KbKity0QFD-IUvLiECndvF3oAY2xAt8N7_ppqmlOUckkkHn7V3uvlWaOc66TlBw9cbXgMEDagPQ6MozpmwzGr/s320/images.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5522598794881095522" border="0" /></a><br /><br />மின்னொடு வானம் தண்துளி தூவ,<br />கிள்ளைப் பார்ப்பின் மூக்கினை ஒத்த<br />செம்பரிதி அமிழும் காஞ்சனப் பொழுதில்,<br />வெரூப் பாலையின் பெரும்பசி வயிற்றோன்<br />கொள்ளும் கவளத்துட் சிறுபரல் போல்<br />இடறுமுன் நினைவை;<br />கொல்லேற்றின் ரணம் படர் கழுத்தை<br />அழுத்திச் சிவந்த நுகத்தடியதனை<br />இரையென விழுங்கி,<br />குறுமரம் சுற்றும் வனத்து அரவமாய்<br />செரித்திட நினைக்கையில்,<br />கிழியுதென் யாக்கைபாற்கடல் சக்திhttp://www.blogger.com/profile/07253897296826971596noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-8247139698668666419.post-53092717142836430692010-09-25T08:52:00.001-07:002010-09-28T00:08:43.433-07:00இரையாண்மை - புணர்ச்சி விதி<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjhksuVPE8xPFQdTFkW8LAJwZuvGSRu8aN9FEpYchr4gkoXpVysUjOqqlNCogue4SSYowOVraHKDuHQZ7NE4i9ArH1AMin4iU3adnc-H0LdjS9GL8LPfiombXBaWD-Bh-7uFKfzOl25KT0d/s1600/Afd7BDa7jFTiTEA.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 283px; height: 306px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjhksuVPE8xPFQdTFkW8LAJwZuvGSRu8aN9FEpYchr4gkoXpVysUjOqqlNCogue4SSYowOVraHKDuHQZ7NE4i9ArH1AMin4iU3adnc-H0LdjS9GL8LPfiombXBaWD-Bh-7uFKfzOl25KT0d/s320/Afd7BDa7jFTiTEA.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5520879814819691042" border="0" /></a><br /><br />இரை+ஆண்மை<br />இரையாண்மை<br /><br />நின்றதின் மேல் வருமொழி புணர்ந்தது<br /><br />"ஐ' வழி(லி)யால்,<br />"ய'வ்வெனத் திரிந்தது உயிர்; கிடந்தது உடல்.<br /><br />உடல் மேல் உடல் வந்து யவ்வியதில்,<br />'ஆ'காரமும், ஆகாரமும் அடிபட்டுப் போனது.<br /><br />இறை ஆண்மை கெட்டதால்,<br />இரை பெண்மை கெட்டது.<br /><br />இரையே இங்கு வரவேற்றதால்,<br />வந்து புணர்ந்ததெல்லாம்,<br />வன்புணர்ந்தது.<br /><br />வழுக்கல் என்பதால்<br />வழு, வழுவமைதி ஆனது<br /><br />புணர்ச்சியின் இறுதியில்,<br />திரிந்தது ஆண்மை;<br />இறைஞ்சிய போதும்<br />எஞ்சியது இரை.<br /><br />சொல், பொருள்<br />எப்படி நோக்கினும்<br />இது விகாரப்புணர்ச்சிபாற்கடல் சக்திhttp://www.blogger.com/profile/07253897296826971596noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-8247139698668666419.post-19363296656359412442010-08-24T08:22:00.000-07:002010-08-24T08:27:12.155-07:00பதிவுலகில் நான் எப்படிப்பட்டவன்?1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?<br />பாற்கடல் சக்திவேல்.<br /><br />2) அந்தப்பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?<br />சக்திவேல் எனது பெயர்; பாற்கடல் வலைப்பூவின் பெயர்.<br /><br />3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.<br />பசுமை பற்றி எழுத வேண்டும் என்று எண்ணி, குறிஞ்சித்திட்டு என்ற பெயர் தேடிப்பிடித்து வைத்திருந்தேன். பிறகு தம்பி சிந்தன், எப்படி வலைப்பூ துவக்குவது என்று சொல்லிக் கொடுத்தான். படிக்க நிறைய வாய்ப்பு; எழுதவும் நிறைய வாய்ப்பு. ஆனால், நான் 100 சதவீத சோம்பேறி என்பதால், இரண்டுமே முழுமையாக நடக்கவில்லை.<br /><br />4)உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?<br />பிரபலமா அப்டின்னா என்னங்க? நான் பிரபலமாயிட்டேன்னு யார் சொன்னாங்க?<br /><br />5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்துகொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?<br />எதுவுமே சொந்த விஷயம் இல்லீங்க. திருடுனதுதான். பின்ன என்ன கேள்விங்க இது. யாருக்குமே சொந்த பாதிப்பு இல்லாம எழுத முடியாது. சில சமூக(!) கருத்துள்ளது எழுதினாலும், எங்கயாவது நாம உள்ள ஒளிஞ்சுருப்போம் இல்ல. அதனால.... சகலமும் கலந்திருக்கும்.<br /><br />6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?<br />இதுவரைக்கும் ஏழு லட்சத்துக்கு நாப்பத்து நாலாயிரத்து முன்னூற்று இருபத்தி ஒரு ரூபாய் சம்பாதிச்சுருக்கேன். நிஜமா நம்புங்க. பதிவு எழுதறதே சம்பாதிக்கிறதுக்குத்தான். (நண்பர்களை சம்பாதிக்கலாம்.; அதற்கு விலை மதிக்க முடியுமா...அடடா)<br /><br />7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?<br />ஐடியா முழுசா இல்லாததால, அடுத்தடுத்து மூணு துவக்கினேன். மூணுமே தமிழ்லதான்;பின்ன துரை இங்கிலீசெல்லாம் எழுதும்னு நினைச்சீங்களா?.<br /> குறிஞ்சித்திட்டு, வழிப்போக்கன், பாற்கடல். தற்போது பாற்கடலில் மட்டும் நீந்திக் கொண்டிருக்கிறேன்.<br /><br />8)மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?<br />யார் நிறைய எழுதினாலும் பொறாமை வரும். கோபம் வந்திருக்கிறது; சில விவாதங்களைக் கேள்விப்பட்டு. ஊர சொன்னாலும் பேர சொல்லக்கூடாது. பிறகு, அவரும் அவர் சார்ந்தவர்களும் என்மேல் கோபப்படுவார்கள். (எங்களின் "தல' வெயிலான் அநியாயத்துக்கும் அப்டேட்ல இருக்கார். அவருக்கும் நேரம் பத்தக்கூடாதுன்னு கடவுள்ட்ட வேண்டிக்கறேன்)<br />9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாரட்டைப் பற்றி..<br />அடடா தினமும் லட்சக்கணக்கான பேர் பாராட்டுறதால, முதல்ல பாராட்டுனவங்க பேரு தெரியல. பதிவுகளை இடுவதற்கு முன், சிந்தனும், திருவும் பாராட்டினார்கள். பதிவுக்குப் பின், வந்த முதல் பாராட்டு பற்றி நினைவில் இல்லை.<br />நல்லவேளை திட்டுனவங்க லிஸ்ட் கேக்கல. சங்கதி அப்புறம் இல்ல தெரிஞ்சு இருக்கும்.<br />10)கடைசியாகவிருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...<br /> ஹலோ கடைசியாகனா என்ன அர்த்தம்.? மங்கலம் பாடலாம்னு பாக்குறீங்களா?<br />எதையாவது சமூகத்துக்கு செய்யணும் நினைச்சு, எதுவுமே செய்ய முடியாத இளைஞன். ஆசிரியர், பத்திரிகையாளன்னு இரண்டு மிக விருப்ப துறைகள் இருந்தும், ஆசிரியராக ஒரு ஆண்டு பணியாற்றி விட்டு, எதையாவது செய்யலாமே என்று பத்திரிகை துறைக்கு வந்தவன். சொல்லிக் கொள்ளும்படி பெரிய அளவுக்கு சாதிக்காவிட்டாலும், சிலருக்காவது என், பணிகள் நன்மை பயந்தது உண்டு. அதற்காகவே இன்னும் பத்திரிகை துறையில் இருந்து விலகாமல் இருக்கிறேன். சில ஆண்டுகள் கழித்து, மீண்டும் தொடர் பதிவில் சந்திக்க நேரிடும் போது, நிச்சயம் அதீத திருப்தியுடன் உங்களைச் சந்திப்பேன்.<br /><br />என்னை தொடர்பதிவுக்கு அழைத்த, "திருச்சொல்' திருநாவுக்கரசு நண்பருக்கு நன்றிகள் பல.<br />அடுத்ததாக நான் அழைக்க நினைக்கும் பதிவர், சிந்தன்(என் குருநாதனும் கூட. சின்னப் பையன் என்பதால், குருநாதருக்குப் பதில் குருநாதன்)பாற்கடல் சக்திhttp://www.blogger.com/profile/07253897296826971596noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-8247139698668666419.post-51033457112517831292010-08-04T05:21:00.000-07:002010-08-04T05:34:09.622-07:00ஒரு சகாவிடமிருந்து...ஒரு சகாவிடமிருந்து...<br /><br />....,<br />அன்புள்ள என்றா, அல்லது நண்பனே என்றா, எப்படி துவங்குவது என தெரியவில்லை. அதனால், உனக்கு பிடித்திரா விட்டாலும், உனது பெயரை முன்னிறுத்தி எழுதுகிறேன். தகவல் தொழில்நுட்பம் நேரில் பேசுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் அளவுக்கு வளர்ந்து விட்டிருந்தாலும், கடிதங்களின் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி விட முடியாது. இதை நீ கடிதமாகவே பாவிப்பாய் என எண்ணுகிறேன்.<br />பள்ளியில் சேர்ப்பதற்கு முதலில் இருந்து, துவக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, உடுமலை கல்லூரி, விடுதி, பட்டமேற்படிப்புக்காக தங்கியிருந்த அறை, கோவை கல்லூரி, புத்தக நண்பர்கள், ஏதேச்சையாக சந்தித்த மனிதர்கள் என எனக்கான வட்டத்தில் நிறைய சகாக்கள் இருக்கின்றனர்.<br />எத்தனை பேர் இருப்பினும், எனக்கான பக்கங்களில் உன்பெயரை எழுதாமல் தவிர்த்து விட முடியாது. குறிப்பிட்ட சில பேர் என் நெருங்கிய வட்டத்துக்குள் இருப்பார்கள். கல்லூரியில் ஆத்தி வகித்த இடத்தை, இங்கு நீ எடுத்துக் கொண்டாய் என எண்ணுகிறேன். ஒப்பிடுவது எனக்கு பிடிக்காது என்றாலும், இதை சொல்வதற்கு காரணம் இருக்கிறது. மற்றவர்களுக்கு கூட உதவி செய்திருக்கிறேன்; ஆத்திக்கு எதுவும் செய்ததில்லை. ஆத்தி அதை எதிர்பார்த்ததும் இல்லை.<br />என்னுடன் அவன் மூர்க்கத்தனமாக நட்பு பாராட்டினான். மூன்றாம் ஆண்டில், அவன் வாங்கி வந்த தின்பண்டத்தை நான் மற்றவர்களுக்கு கொடுத்து, அவனுக்கு கடைசியில் கொடுத்த போது, அவன் பார்த்த பார்வையும் லேசாக விடுத்த முணுமுணுப்பும் இன்னும் நெஞ்சில் வலிக்கிறது. அதற்குப்பின் மூன்றாண்டுக்குப் பின் அந்த இடத்தில் நீ இருக்கிறாய் என எண்ணுகிறேன்.<br />எங்கள் ஊரில் நான் கோபப்படாத பையன். ஆனால், எனக்கு மிக நெருங்கியவர்களுக்கு என் கோபம் பிரசித்தம். நீ என்னிடம் இருந்த அளவுக்கு நான் உன்னிடம் இருந்ததில்லை. இருக்கவும் தோன்றியதில்லை.<br />நீ ஒன்றை கவனித்திருப்பாயென நம்புகிறேன். சமீபத்திய உன் பிறந்தநாளின் போது, நான் உனக்கு வாழ்த்து சொல்லவே இல்லை. எப்படி சொல்வது எனவும் தெரியவில்லை. சில நேரங்களில் சம்பிரதாயங்களை நான் வெறுக்கிறேன்.<br />சிலவற்றில் எனது பிடிவாதத்தை நீ வெறுத்திருக்கக் கூடும். ஆனால், என் வளர்ப்பு நிலை அப்படி. "தோழமையோடும் ஏழமை பேசேல்' எனக்கூறி வளர்க்கப்பட்டேன். எனக்குள் இருக்கும் சுயம், யாரிடம் தாழ்ந்து நிற்க அனுமதிப்பதில்லை. அது ஒருவகையான பைத்தியகாரத்தனமாக கூட இருக்கலாம். நான் இறங்கிப் போயிருக்கிறேன் என்றால், அப்போது என்னை அதிகபட்சமாக சமாதானப்படுத்திக் கொண்டிருக்கக் கூடும்.<br />ஓ... இந்த கடிதம் பாதை மாறி விட்டது.<br />நீ என்னிடம் இருந்த, இருக்கும் அளவுக்கு நான் உன்னிடம் இருந்ததில்லை. இருக்கவும் தோன்றியதில்லை. அப்படி இருக்க முயற்சியும் செய்ததில்லை. என் கோபங்களுக்கு நீ ஆளாகும் போது, பின்னர் யோசிக்கையில் அது அதிகப்படியானதோ என எண்ணத் தோன்றுகிறது. என் பத்திரிகை உலக வாசம் நிறைய அற்புத தருணங்களை, வேடிக்கையான சம்பவங்களை, மறக்க முடியாத நிகழ்வுகளை, நெருக்கமான உறவுகளை தந்திருக்கிறது.<br />மிக நெருங்கிய, நெருங்கிய, ஆத்மார்த்த, ஆலோசனை கேட்கின்ற, மடிசாய்ந்து அழுகிற, பிரதிபாசம் எதிர்பார்க்கிற, விவாதம் நடத்த தகுதியுடைய, ஏதேனும் கற்றுக்கொள்ள, சிரிக்க மட்டும், உபயோகப்படுத்திக் கொள்ள இன்னும் இத்யாதி, இத்யாதியினர் என்னுடனான உறவு வட்டத்தில் இருக்கின்றனர்; இருப்பர்.<br />இதில் ஏதாவது ஒன்றாகத்தான் நீயிருப்பாய், என அடையாளமிட்டுக் காட்ட இதைச் சொல்லவில்லை. இவற்றில் நீ எந்த ரகம் எனவும் அடையாளப்படுத்த கூறவில்லை.<br />ஒன்று மட்டும் நிச்சயம். நீண்ட ஆண்டுகளுக்கு பிரிந்திருக்க வேண்டியிருந்தால், என்றாவது ஒரு நாள் உன் நினைவு வரும் போது சிறு புன்னகையும், கனத்த மௌனமும் நிச்சயம் என்னுள் எழும்.<br />இன்னொன்றையும் நினைவில் கொள், ஏதேனும் தவறு செய்திருந்தால், அதற்காக உன்னிடம் மன்னிப்பு கோரவும் மாட்டேன். ஏனென்றால், நான்...... நான்தான்.<br /><br />திருப்தியுடன்...<br />நான்.<br />(நவ.,2009)பாற்கடல் சக்திhttp://www.blogger.com/profile/07253897296826971596noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-8247139698668666419.post-69484613627024530382010-07-30T23:57:00.000-07:002010-07-31T00:00:04.106-07:00காசுமரம்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhPnIZKVK5-1xsvBxoM-ucLo0xVO8qB3MbRblDVNAgspAB3RHANaYL_urb8aUYLRC-q_P7ECMoAu8GbAxyy1sDZGdmYtUMfxmRarq6XVkRcTJL8m9WO9JwoIRcpohKdAiIXTg9guTjWHXzn/s1600/silver-dollar-money-tree-200X200.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 200px; height: 200px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhPnIZKVK5-1xsvBxoM-ucLo0xVO8qB3MbRblDVNAgspAB3RHANaYL_urb8aUYLRC-q_P7ECMoAu8GbAxyy1sDZGdmYtUMfxmRarq6XVkRcTJL8m9WO9JwoIRcpohKdAiIXTg9guTjWHXzn/s320/silver-dollar-money-tree-200X200.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5499961366035344578" border="0" /></a><br /><div style="text-align: right;">உள்ளங்கை பிசுபிசுப்பில் உறுத்தியது<br />வட்டமாய் இருந்த வஸ்து<br />இதை வைத்து என்ன<br /></div><div style="text-align: right;">வாங்கலாம்?<br /></div><div style="text-align: right;">கோமதியிடம் இருக்கற மாதிரி<br />மின்னாம்பூச்சி,<br />சரசுகிட்ட மயில்குஞ்சு,<br />யோகுகிட்ட பனங்கருப்பட்டி,<br />தேன்மிட்டாய்,<br />சுத்தரமிட்டாய்,<br />எலந்த வடை,<br />சடை வில்லை,<br />ஊசிக்கப்பலின் வாலாய்<br />நீ...ண்டது பட்டியல்.<br />எல்லாமே வாங்கலாம்<br />காசு மரம் முளைச்சதுக்கப்புறம்...<br />விழுங்கப்பட்டது காசு.<br /><br /></div>பாற்கடல் சக்திhttp://www.blogger.com/profile/07253897296826971596noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-8247139698668666419.post-37568042068650682582010-07-17T00:26:00.000-07:002010-07-17T00:33:36.284-07:00குழந்தை என்னுமோர் "குறும்பு'யல்நம்மை விட <a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi6lNKVf9ntHX93FOlckF5VXgs8GsRsMoIHiIarmSOecosMD8AGrI2wF0SeLvXokfRcgYlQZHc4SMaAPRTNSCZzH4qx_nmZa5EYUXk6Tj-I4mBvLDVXqdqO0l_NqtFw6YeNZZni-dz0tNzz/s1600/Baby1.jpg"><img style="float: left; margin: 0pt 10px 10px 0pt; cursor: pointer; width: 208px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi6lNKVf9ntHX93FOlckF5VXgs8GsRsMoIHiIarmSOecosMD8AGrI2wF0SeLvXokfRcgYlQZHc4SMaAPRTNSCZzH4qx_nmZa5EYUXk6Tj-I4mBvLDVXqdqO0l_NqtFw6YeNZZni-dz0tNzz/s320/Baby1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5494774926845012066" border="0" /></a><span><span>புத்திசாலிகளிடம்</span></span> பேசும்போது 'எச்சரிக்கை'யாகவும், முட்டாள்களிடம் பேசும்போது 'அதிக எச்சரிக்கை'யாகவும் பேசுவது நல்லது, நண்பர் திரு தனது பதிவில் இந்த வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தார். படிக்கும் போது ஏனோதானோ என்று படித்து விட்டேன். அவரிடம் கேட்க வேண்டும் குழந்தைகளிடம் பேசும் போது எப்படிப் பேச வேண்டும் என்பது. தயவு செய்து முட்டாள் போல பேசிவிடுங்கள் அதுதான் நல்லது என நினைக்கிறேன்.<br />கடந்த இரண்டு நாட்களுக்கு முன் எனக்கு அப்படியொரு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தாள் சுவி, சுவேதா; பக்கத்து வீட்டு குட்டி தேவதை ( பக்கத்து வீட்டுக்கு மட்டும். பின்னே என்னை மூக்கறுத்தால், குட்டிச்சாத்தான் என்றுதானே சொல்லத்தோணும்).<br />விஷயம் இதுதான். நான்கைந்து சோட்டாளிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள் சுவி. பள்ளியில் ஆசிரியர்கள் இவளுக்கு நடத்திய பாடத்தை, வீட்டு வாசல் படிகளுக்கும், நாற்காலிகளுக்கும் நடத்திக் கொண்டிருந்தாள். சலிப்புத் தட்டி விட்டதால், "மாமா நீதா நெறைய படிச்சியாமா எங்கம்மா சொல்லிச்சு (அப்படியா சொல்லி வச்சுருக்காங்க.. ம்ஹூம் இது ஆவறதில்ல). எதாவது கதை சொல்லு. தங்க(ம்) கதை இருந்தா சொல்லு". (பொண்ணுக காரியத்துல கண்ணா இருக்காங்க).<br />நான் கதை சொல்ல பிரயத்னப்படாமல், சமாளிக்க முயன்றேன். ஒருவாறு ஆசுவாசப்படுத்திக் கொண்டு, சங்கத் தமிழரின் பெருமையை பீற்றலாம் என நினைத்து, "அந்தக் காலத்துல நம்ம கிட்ட நெறைய நெறைய<br />தங்கம் இருந்துச்சாம். நம்ம ஆத்தா இருக்குல்ல அவங்கள மாதிரி இருக்கறவங்க, காதுல பெரிசா தொங்கட்டான் மாதிரி குண்டு குண்டா தங்கம் போட்டிருப்பாங்களாம். கோழி, காக்காய் எல்லாம் நெல்லு தானியத்த கொத்த வந்துச்சுனா, காதுல இருக்கற தங்கத்த கழட்டி வீசிதான் விரட்டுவாங்களாம்".<br />நிசமாவா... நம்பாமல் பார்த்தாள். (அந்த முகச்சுளிப்புக்கே ஆயிரம் பொன் தரலாம்). அவ்ளோ நெறையாவா... பொய் சொல்லலைல்ல. ஒரு வழியாக நம்பி, கண்கள் விரிய கேட்டுக் கொண்டிருந்தாள்( மறுபடியும் ஆயிரம் பொன்).<br />திடீரென வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த அக்கா, "நகத்தக் கடிக்காம இருக்க மாட்டியா. பொழுதோட நகம்வெட்டறது, கூட்டறதுன்னு ஆகாத வேலையத்தான் செய்வ. சொன்ன கேட்கறதே இல்ல" போகிற போக்கில் சுவியை வசைபாடி விட்டு போக.<br />காதருகே, எப்பப்பார்த்தாலும் இப்டிதான். ஏ மாம்சு, நைட்ல நகம் வெட்டக்கூடாதா, டைம் கிடக்றப்பதா வெட்ட முடியும். உங்கக்கா கிட்ட சொல்லு' என்றாள் சுவி.<br />அதுக்கப்பறம்தான் சனி ஏழாம் இடத்தில் நீச்சம் பெற்றான்.<br />"அம்மாக்கு ஒன்னும் தெரியாது. அந்தக் காலத்துல இப்ப மாதிரி பளிச்சுனு எரிய வெளக்கு இல்ல. மின்சாரம் இல்ல. அதனால, கொஞ்சம் வீடு இருட்டா இருக்கும். நகத்தை சரியா வெட்ட முடியாது. சிந்திக்கிடக்கறத முழுசா கூட்ட முடியாது. கூட்டி அள்றதுல சின்னச் சின்ன பொருட்கள் குப்பையோட வெளில கொட்டிருவோம் இல்ல. அதனாலதான் அப்படி சொல்லியிருப்பாங்க".<br />என் மேதாவித் தனத்தைக் காட்டவும், எனக்குத் தெரிஞ்ச பகுத்தறிவை அவளுக்கும் ஊட்டலாம் என்றுதான் அப்படிச் சொன்னேன். நான் சொன்னதற்கு அவளிடம் உடனடி மறுமொழி வந்தது. ஆனால், வேறுவிதமாக.<br />சினிமாவில் காட்டுவார்களே "ஆப் ரவுண்டு டிராலி ஷாட்' அதே மாதிரி இடுப்பில் கை வைத்துக் கொண்டு என்னை அரைவட்டம் போட்டாள். ஒவ்வொரு வார்த்தைக்கும் 30 நொடிகள் இடை வெளி விட்டு பேசினாள். அதே மாதிரி நீங்களும் படித்துப் பாருங்கள்." நைட்டு..... கூட்டினா.... சின்னப் பொருள்... குப்பையில போயிரும்....."<br />முகத்துக்கு நேரே கை நீட்டியபடி, "மூஞ்சிய பாரு. அதா தங்கத்தையே வீசி கோழி முடுக்கறாங்களாம். கூட்டுனா சின்ன பொருள் வெளியே போயிரும்னு, விட்டுட்டாங்களாம். தங்கத்த விட, சின்னப் பொருள பெரிசா நினைப்பாங்களாக்கு. தெரிஞ்சா ஒழுக்கமா சொல்லணும். இல்லேன்னா..... டேஷ் மாதிரி ஒளறக்கூடாது.(அவளின் வகுப்புத் தோழி ஒருத்தியின் பெயர்தான் அந்த டேஷ்சில் வர வேண்டிய பெயர். கெட்ட வார்த்தை எல்லாம் இல்லை. பெயர் நினைவில் இல்லாததால் டேஷ் போட்டிருக்கேன்)<br />"டே அழகு வாடா விளையாடப்போலாம். இதுக்கு எங்க அம்மாவே பரவால்ல," சற்றும் மதிக்காமல் அவள்பாட்டுக்கு போய்விட்டாள். நான் கீழே கிடந்த என் மூக்கை அக்காவுக்கு தெரியாமல் எடுத்து மாட்டிக் கொண்டு, அவசரமாக வெளியே போய் விட்டேன்.<br />அந்தக் கணத்தில் முடிவு செய்தேன். இனி குழந்தைகளிடம் முட்டாள் மாதிரி பேசிவிடுவது எல்லாருக்கும் நல்லது என்று.பாற்கடல் சக்திhttp://www.blogger.com/profile/07253897296826971596noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-8247139698668666419.post-81859737907112156522010-07-16T00:44:00.000-07:002010-07-16T00:54:22.894-07:00கம்யூனிஸ்டுகள் மீதான ஊழல் குற்றச்சாட்டு - சமூகத்தின் புரிதல்பதிவர் செம்மலர் அவர்களின் "கோவிந்தசாமியின் விலகலும், போலி கம்யூனிஸ்டுகளின் வேடமும்' என்ற இடுகைக்கு பதில் இடுகையாகவே இடப்படுகிறது. அவருக்கு பின்னூட்டம் இடலாம் என்றுதான் நினைத்திருந்தேன். சற்றே நீளும் எனத் தோன்றியதாலும், இதர "தோழர்'களை விவாதத்துக்கு அழைக்கவும் முடிவு செய்தே, இப்பதிவு இடப்படுகிறது. நான் ஒன்றும் கம்யூ.,க்களின் தீவிர எதிர்ப்பாளனோ, ஆதரவாளனோ அல்ல.<br />என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில், "கம்யூனிஸ்டுகள் நாம் நினைப்பது போல் இல்லை; அங்கும் ஊழல் மலிந்திருக்கிறது. எனவேதான் கோவிந்தசாமி என்ற தனி மனிதனும் விலகி, மற்ற கட்சியினரைப் போலவே நாங்களும் என நிரூபித்திருக்கிறார்' என்பதே, செம்மலர் அவர்களின் கருத்துப்பிழியல் என நினைக்கிறேன்.<br />அதை நேரடியாகவே அவர் சொல்லி இருக்கலாம். திருப்பூர் வாசி என்பதால், திருப்பூரின் இதர முகங்களையும் தொட்டுத்துலக்கி, தொழிலாளர் பிரச்னை என சுற்றி வளைத்து, கம்யூ.,க்களின் வேடத்தை உரிக்க நினைத்திருக்கிறார்.<br />அவர் சொல்வதில் சிறிது உண்மை இல்லாமல் இல்லை. ஆனால், இங்குள்ள முதலாளிகள் கட்டாயமாக எட்டு மணி நேரத்துக்கும் கூடுதலாக வேலை வாங்குகிறார்கள் என்பது வெளி உலகுக்கு சித்தரிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள சூழலில் எட்டு மணி நேர வேலை என்பது வெறும் பேச்சு மட்டுமே. அனேகமாக தோழர் செம்மலரும் (எந்தப் பணி செய்பவராக இருப்பினும்) எட்டு மணி நேரத்துக்கும் கூடுதலாகவே உழைப்பவராக இருப்பார். அதை அவரும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.<br />//திருப்பூரில் எந்த தொழிலாளியும் கொத்தடிமை கிடையாது சொல்லப்ப்போனால்<br /><br />எட்டுமணி நேரம் மட்டும் அல்லது பனிரெண்டு மணிநேரம் வேலை மட்டும்<br /><br />என சொன்னால் வேலைக்கு சேராத தொழிலாளிகளைத்தான் இங்கு பார்கிறோம்<br /><br />ஏன் இந்த நிலை என்றால் ஒரு நாள் இரண்டுநாள் ஓடி பார்த்தால்தான் இங்கு<br /><br />இருக்கும் விலைவாசிக்கு வண்டி ஓட்ட முடியும் அதற்கு தகுந்தாற்போல<br /><br />வீட்டு வாடகை மற்றும் விலைவாசி ஏறிவிட்டது .<br />///<br />பின் நிதர்சனத்தை மக்கள் பிரதிநிதி என்ற முறையில் வெளிப்படையாக சொன்னதற்காக அவருக்கு இந்த தண்டனை அவசியமா? கம்யூ.,க்கள் என்றாலே, 100 சதவீத வார்ப்புகளாக, நெகிழ்வுத் தன்மை இல்லாதவர்களாக இருக்க வேண்டும் என்று நாமாகவே அர்த்தப்படுத்திக் கொள்வது எவ்விதத்தில் நியாயம்?<br />///<br />லாஜிக் படி கோவிந்த சாமி செய்தது சரிதான் ஒரு வகையில் ஆனால்<br /><br />கட்சி இதற்காக இவரை எச்சரிக்கவில்லை மாறாக அவர் வாங்கிய தொகையில்<br /><br />கட்சியின் மாநில கமிட்டிக்கு பங்கு கொடுக்கவில்லை என்பதால் தூக்கியது.///<br />இந்தக் குற்றச்சாட்டை எந்த அடிப்படை ஆதாரத்தை வைத்து சாட்டினீர்கள் செம்மலர். பொத்தாம்பொதுவாக இக்குற்றச்சாட்டை நீங்கள் எப்படி வைக்க முடியும்? நீங்கள் சொல்வது போல் கம்யூ., கட்சியிலும் ஊழல் இருக்கிறது என்றே வைத்துக் கொண்டாலும், எரியும் கொள்ளியில் நல்ல கொள்ளி இவைதான். அப்படியே இருப்பினும் கட்சிக் கட்டுப்பாட்டை(!), கம்யூ., கட்சி என்றால் மக்கள் மனதில் இருக்கும் படிமத்தை உடைக்கும் விதத்தில் காசு வாங்கியவருடன் சமரசம் பேசச் சொல்கிறீர்களா என்ன?<br />/// போலி கம்யுனிஸ்டுகள் பேசுவதெல்லாம் சும்மா உருகி உருகி ஓடும் திருப்பூர்<br /><br />வீதியில் திமுக காரன் அதிமுக காரன் எல்லாம் என்ன சொன்னாலும் தொழிலாளர்<br /><br />மத்தியில் எடுபடாது அதே நேரத்தில் இந்த போலி தொழிற்சங்க வாதிகளும்<br /><br />முதலாளிகளும் ஏமாற்றும் அப்பாவி ஜீவன்கள் தொழிலாளர்கள் தாம்.///<br />ஹா, திருப்பூர் என்ன கம்யூ.,க்களின் எஃகு கோட்டை என்றா நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அப்படி எதுவும் இல்லை. அ.தி.மு.க., தி.மு.க., காரன் சொன்னாலும் எடுபடும். கம்யூ.,க்கள் சொன்னால் எடுபடாமலும் போகும். இன்னும் இங்குள்ளவர்களின் மனப்போக்கை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. கம்யூ.,வில் வட்டார செயலாளராக இருந்து கொண்டு, தீவிர களப்பணி ஆற்றிக் கொண்டே, இரட்டை இலைக்கு எம்.பி., தேர்தலில் வாக்களித்தவர்கள் பற்றி எனக்கு நன்கு தெரியும் தோழரே.<br /><br />எதற்காக இந்த பதிவை எழுதினேன் என்பதில் இன்னும் எனக்கு புரிதல் இல்லை. ஆனால், உங்களின் இறுதி சில வரிகள் நிச்சயம் ஆட்சேபணைக்கு உரியவை. அதற்கு பதிலளிக்கவே இந்த இடுகை. ஆனால், அசந்தர்ப்பமாக மேலே உள்ள கருத்துகளையும் சொல்லியாக வேண்டி இருந்தது.<br /><br />///<br />மொத்தமா ஒரு சாதி ஆதிக்கத்தில் இருந்து திருப்பூர் விடுவிக்கப்படும் வரை<br /><br />தொழிலாளர்கள் ஏமாற்றப்படுவது தொடரும்///<br />திருப்பூரில் சாதிய ஆதிக்கம் என்ற சேற்றை காரண காரியம் இல்லாமல் வீசியெறியாதீர்கள். எந்த நிறுவனத்தில் இன்ன சாதிக்காரன்தான் பணிபுரிய வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர். அல்லது குறிப்பிட்ட சாதிக்காக அதிக சம்பளம் கொடுக்கிறார்கள். திருப்பூர் வந்தேறிகளின் ஊர் என்பதை மறந்து விட்டு இது போன்ற சாதிய குற்றச்சாட்டை முன்வைக்காதீர்கள். எல்லாப் பகுதிகளிலும் ஏதேனும் ஒரு சாதியினர் அதிக எண்ணிக்கையில்தான் இருப்பார்கள். அந்த ஊரில் நீண்ட காலமாக வசிப்பவனிடம் செல்வம் அதிகம் இருக்கலாம்.<br />வடமாநில சேட்டுகளின் நிறுவனங்கள் எத்தனை இருக்கின்றன என்பது உங்களுக்கு தெரிந்து இருக்கும். இன்னும் சொல்வதானால், சிங்களவனுக்கு கீழே பணிபுரியும் பிறவிகளும் இங்கேதான் இருக்கிறார்கள்.<br />அதையும் நினைத்துப் பார்த்து விட்டு சாதிய ஆதிக்கம் திருப்பூரில் என்று குற்றம் சாட்டியிருக்க வேண்டும். ஏதேனும் ஒரு குறிப்பிட்ட சாதியின் மேல் தனிப்பட்ட கோபம் இருப்பின் அதை விட்டு விடலாம்.<br />சுந்தர ராமசாமி 1966லேயே சொல்லி இருக்கிறார் "கலைஞனின் சமூகப் பொறுப்புகளும், பொதுநல உணர்ச்சிகளும் பெரிதும் மிகைப்படுத்தப்பட்ட காலம் இது' என்று.<br />எழுதும் எழுத்தாளர்களுக்கு எல்லாம் சமூக பொறுப்புணர்வு இருக்கிறது என்ற போர்வையில் பொத்தாம்பொதுவாக குற்றச்சாட்டுகளை முன்வைப்பது அபத்தம். உங்களின் சாதியக் குற்றச்சாட்டை மறுபரிசீலனை செய்யுங்கள் தோழரே.பாற்கடல் சக்திhttp://www.blogger.com/profile/07253897296826971596noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8247139698668666419.post-84555872390182428932010-07-09T09:06:00.000-07:002010-07-09T23:28:40.611-07:00கொங்குப் பழமைகளை சேகரிக்கலாம் வாரீங்களா..."ஏஞ்சாமி கைசாளைக்குள்ற பாத்தியா' அப்பத்தா கேட்டதும்தான் சட்டென நினைவுக்கு வந்தது; கைசாளை என்ற வார்த்தையையே நான் மறந்து விட்டிருந்தேன்.<br />கொங்கு நாட்டுப்புறத்தின் மிக சரளமான வட்டார வழக்குகள் பல வழக்கொழிந்து போய் விட்டன. தமிழே வழக்கொழியும் நிலையில், வட்டார வழக்கு எம்மாத்திரம். உண்மையில் வட்டார வழக்கில் பயன்படுத்தப்படும் சொற்களின் வேர்களை ஆராய்வது என்பது அலாதியானது. ஒவ்வொன்றுக்கும் நிச்சயம் ஏதாவது அர்த்தம் இருக்கும்.<br />"ங்'கண்ணா போட்டு, இழுத்து இழுத்துப் பேசினால் அது கோயமுத்துõர் பாஷை என்ற அளவில்தான் கொங்கு வட்டார வழக்கு அறியப்பட்டு வருவது வேதனைக்குரிய ஒன்று.<br />அதற்காக இன்னும் வட்டார வழக்கிலேயே பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்று அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டாம். வட்டார வழக்குகளை கூடவே கூட்டிக் கொள்ளவும் முடியவில்லை; வேண்டாம் என உதறிவிடவும் முடியவில்லை.<br />சில பிரத்யேக சொற்களை கிராமத்தில் கேட்டுப்பாருங்கள். தமிழோடு எவ்வளவு ஒருங்கிணைந்த வார்த்தைகள் அவை என்பது புரியும்.<br />"சலதாரி' என்ற வார்த்தை பற்றித் தெரியுமா? வீட்டு சமையலறையில் பாத்திரங்களைக் கழுவ கட்டி வைக்கப்பட்டிருக்கும் இன்றைய "வாஷ்பேசின்'தான் சலதாரி. கிராமப்புறங்களில் குளியலறைக்குள் குளிக்கும் இடத்தில் தண்ணீர் வெளியே தெறிக்காத வகையில், சிறிய தொட்டிமாதிரி கட்டி இருப்பார்களே; நாம் நின்று குளிக்கும் இடம். அதற்குப் பெயரும் சலதாரிதான்.<br />சலம் என்றால் நீர். அது செல்லும் தாரைவழி என்பதே அதற்கு அர்த்தம். வழியும் கங்கையை தலையில் கொண்டிருப்பதால், சிவனுக்கும் சலதாரி என்றொரு பெயர் உண்டு. இது வெறும் உதாரணம் தான்.<br />திடீரென அப்பத்தா கேட்டதால், அந்த வார்த்தை நினைவுக்கு வந்தது. சராசரி தமிழன் 3,000 வார்த்தைகளையே பயன்படுத்துகிறனாம். இரண்டரை லட்சத்துக்கும் அதிகமான வார்த்தைகள் தமிழில் இருக்க, நாம் பயன்படுத்துவது சொற்பமே.<br />குறைந்தபட்சம் ஒரே மாதிரியான அர்த்தம் தரும் வேறு வேறு வார்த்தைகளைப் பயன்படுத்தினால், மற்றவர்களால் கவனிக்கப்படுவோம் என்ற உளவியல் உண்மையை பரப்பினால் தவிர, தமிழ் வார்த்தைகளை கூடுதலாக உபயோகிக்கும் நிலையை ஏற்படுத்த முடியாது.<br />அழிந்து வரும் கொங்கு வட்டாரச் சொற்களையும், புழங்கு பொருட்களையும் சேகரிக்க திட்டமிட்டுள்ளேன். சக நண்பர்களிடம் உதவி கோரும் எண்ணமும் உள்ளது. தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தினரும் இசைவு தெரிவித்துள்ளனர்.<br /><br />ஓ மறந்துட்டனுங்க... கைசாளைன்னா சமையல் அறைனு அர்த்தமுங்க... அப்புறம் இன்னொன்னு. இதுமாதிரி வட்டார வழக்குச் சொல் ஞாபகத்துக்கு வந்துதுன்னா, எழுதி வச்சுங்குங்க. நா அப்புறமா உங்ககிட்ட கேட்டு வாங்கிக்கிற. நீங்களும் இந்த சோலில சேந்தா நல்லதுதானுங்க. ஒரு நாளுக்கு 10 பழமை சேத்துனம்னா 100 நாள்ல ஆயிரம் பழமை சேகரிச்சுப்புடலாம். இதே நாலஞ்சு பேருன்னா ஆறு மாசத்துல ஆளுக்கு ரெண்டாயிரம் சேர்த்து, பத்தாயிரம் பழமை கெடைக்கும். முடிஞ்சா சேருங்களேபாற்கடல் சக்திhttp://www.blogger.com/profile/07253897296826971596noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-8247139698668666419.post-65334340613699584662010-06-14T00:08:00.000-07:002010-07-03T01:10:49.066-07:00அழிவின் விளிம்பில் ஒரு நதி<span style="font-size:85%;"><span style="font-weight: bold;">கரையிழந்த</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">காஞ்சி</span><span style="font-weight: bold;">... </span><span style="font-weight: bold;">கறைபடிந்த</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">நொய்யல்</span><span style="font-weight: bold;">...</span><br /></span><div style="text-align: justify;"><span style="font-size:85%;"><br /><span>மேற்குத்தொடர்ச்சி</span> <span>மலையில்</span> <span>உற்பத்தியா</span></span><span style="font-size:85%;">கி <span>கோவை</span>, <span>திருப்பூர்</span>, <span>ஈரோடு</span>, <span>கரூர்</span>, <span>திருச்சி</span> <span>என</span> <span>ஐந்து</span> <span>மாவட்டங்களை</span> <span>கடந்து</span> <span>காவிரியில்</span> <span>கலக்கிறது</span> <span>காஞ்சிமாநதி</span>. <span>தான்</span> <span>சென்றவிடமெல்லாம்</span> <span>செழிப்பாக்கிய</span> <span>காஞ்சி</span> <span>நதி</span>, <span>காவிரியுடன்</span> <span>சங்கமிக்கும்</span><span>இடத்தால்</span> "<span>நொய்யல்</span>' <span>எனப்</span> <span>பெயர்</span> <span>கொண்டது</span>. <span>நொய்</span> <span>என்ற</span> <span>சொல்லுக்கு</span><span>நுண்மை</span>, <span>மென்மை</span> <span>என்பது</span> <span>பொருள்</span>. <span>தன்</span> <span>நுண்ணிய</span> <span>மணற்</span> <span>பரப்பினால்</span> <span>இப்பெயர்</span><span>பெற்றது</span> <span>என்ற</span> <span>கருத்தும்</span> <span>உண்டு</span>. <span>காலப்போக்கில்</span> <span>காஞ்சி</span> <span>நதி</span> <span>என்ற</span> <span>பெயர்</span><span>வழக்கொழிந்து</span> <span>போனது</span> <span>போலவே</span>, <span>நொய்யலும்</span> <span>தன்</span> <span>வளமிழந்து</span> <span>போனது</span>.<br /><span>மனித</span> <span>இனம்</span> <span>தன்னைச்</span> <span>சுத்தப்படுத்திக்</span> <span>கொள்ள</span> <span>தண்ணீரைப்</span> <span>பயன்படுத்திக்</span><span>கொள்ளலாம்</span> <span>எனக்</span> <span>கற்றுத்தந்த</span> <span>நாகரீகங்கள்</span> <span>மூன்று</span>. <span>பாரம்பரியம்</span> <span>மிக்க</span> <span>எகிப்து</span>, <span>சிந்துசமவெளி</span> <span>நாகரிகங்களுக்</span></span> <span style="font-size:85%;">கு <span>இணையாக</span> <span>தமிழ்</span> <span>நாகரீகத்துக்கும்</span> <span>இடம்</span><span>உண்டு</span>.<br /><span>நொய்யல்</span> <span>நதிக்கரையின்</span> <span>கொடுமணல்</span> <span>நாகரீகம்</span> <span>கி</span>.<span>மு</span> 300<span>ம்</span> <span>ஆண்டுக்கும்</span> <span>கி</span>.<span>பி</span>. 300<span>ம்</span> <span>ஆண்டுக்கும்</span> <span>இடைப்பட்டது</span> <span>எனத்</span> <span>தொல்பொருள்</span> <span>சான்றுகள்</span><span>தெளிவுபடுத்துகின்றன</span>.<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1tczuDLsojZuV5VKc7asnQGE83GcpSvXQ3aKx9WHoVki5aDkOPLIhqbUBQtAs1yk-OVCL4qlHIcTOoi6Qou1wTwdtA7-rH9MyLsgEpCo2i-rWJZBTCpx9zNtHkTAhdIGPY5L_iMAhrdDX/s1600/Noyyal_2.jpg"><img style="float: left; margin: 0pt 10px 10px 0pt; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1tczuDLsojZuV5VKc7asnQGE83GcpSvXQ3aKx9WHoVki5aDkOPLIhqbUBQtAs1yk-OVCL4qlHIcTOoi6Qou1wTwdtA7-rH9MyLsgEpCo2i-rWJZBTCpx9zNtHkTAhdIGPY5L_iMAhrdDX/s320/Noyyal_2.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5482523127678933314" border="0" /></a><br /><span>சிற்பக்கலைக்குப்</span> <span>பெயர்</span> <span>பெற்ற</span> <span>பேரூர்</span><span>பட்டீஸ்வரர்</span> <span>ஆலயத்தை</span> <span>தன்</span> <span>கரையில்</span><span>கொண்டுள்ளதும்</span>; <span>லட்சக்கணக்கான</span><span>மக்களின்</span> <span>வாழ்வாதாரமாகவும்</span> <span>இருந்த</span><span>நொய்யல்</span>, <span>இன்று</span> <span>கடந்து</span> <span>செல்பவர்கள்</span><span>முகம்</span> <span>சுளிக்கும்</span> <span>அளவுக்குக்</span> <span>கழிவுகளைச்</span><span>சுமந்து</span> <span>செல்கிறது</span>.<br /></span> <span style="font-size:85%;">விவசாயிகளைச் </span><span style="font-size:85%;">செழிப்படையச் </span><span style="font-size:85%;">செய்த</span> <span style="font-size:85%;">அதே </span><span style="font-size:85%;">நொய்யல், </span><span style="font-size:85%;">அவர்களின்</span> <span style="font-size:85%;">எதிர்காலத்தையும்</span> <span style="font-size:85%;">கேள்விக்குறியாக்கியுள்ளது.<br /><br /><span>நொய்யலின்</span> <span>வழித்தடமும்</span>, <span>கொடுமண</span></span><span style="font-size:85%;">ல் <span>நாகரீகமும்</span>:<br /><span>மேற்குத்தொடர்ச்சி</span> <span>மலையின்</span> <span>வெள்ளியங்கிரியில்</span> <span>உற்பத்தியாகி</span>, <span>கிழக்கு</span><span>நோக்கிப்</span> <span>பாய்கிறது</span>. <span>இதன்கரையில்</span> <span>பேரூர்</span>, <span>திருப்பூர்</span> <span>என்ற</span> <span>முக்கிய</span> <span>நகரங்கள்</span><span>உள்ளன</span>. <span>தன்</span> <span>வழியில்</span> 32 <span>குளங்கள்</span>, 23 <span>தடுப்பணைகளை</span> <span>நிரப்பி</span>, <span>காவிரியில்</span><span>இணையும்</span> <span>நொய்யல்படுகை</span> 180 <span>கி</span>.<span>மீ</span>., <span>நீளமும்</span>, 25 <span>கி</span>.<span>மீ</span>., <span>அகலமும்</span> <span>கொண்டது</span>. <span>திருப்பூரில்</span> <span>இருந்து</span> 16 <span>கி</span>.<span>மீ</span>., <span>து</span>õ<span>ரத்தில்</span> <span>ஒரத்துப்பாளையம்</span> <span>அணை</span> <span>உள்ளது</span>. <span>நொய்யலில்</span> <span>இருந்து</span> <span>குளங்களுக்குச்</span> <span>செல்லும்</span> <span>வடிகால்களைச்</span> <span>சாளுக்கிய</span><span>சோழர்கள்</span> <span>சீர்படுத்தியுள்ளனர்</span>.<br /><span>காவிரியுடன்</span> <span>சங்கமிக்கும்</span> <span>இடத்தில்</span> <span>இருந்த</span> <span>நொய்யல்</span> <span>குடியிருப்பு</span><span>சேரநாட்டுக்கும்</span> <span>கரூருக்கும்</span> <span>இடையில்</span> <span>முக்கிய</span> <span>இணைப்பாக</span> <span>இருந்ததாகச்</span> <span>சங்க</span><span>குறிப்புகள்</span> <span>தெரிவிக்கின்றன</span>. <span>இங்கு</span> <span>சங்ககால</span> <span>மக்கள்</span> 35 <span>ஏக்கர்</span> <span>பரப்பளவில்</span><span>வசித்து</span> <span>வந்ததற்கான</span> <span>அடையாளங்களைத்</span> <span>தொல்லியல்</span> <span>துறை</span><span>கண்டறிந்துள்ளது</span>.<br /><span>ஈரோட்டில்</span> <span>இருந்து</span> 40 <span>கி</span>.<span>மீ</span>., <span>து</span>õ<span>ரத்தில்</span> <span>அமைந்த</span> <span>கொடுமணல்</span> <span>கொங்குப்பகுதி</span><span>நாகரீகத்துக்கான</span> <span>சான்று</span>. <span>நு</span>õ<span>ற்றுக்கணக்கான</span> <span>முதுமக்கள்</span> <span>தாழி</span>, <span>கல்வெட்டுகள்</span>, <span>மட்பாண்டங்கள்</span>, <span>புதைபொருட்கள்</span> <span>கொடுமணல்</span> <span>நாகரீகம்</span> <span>தொன்மையானது</span><span>என்பதை</span> <span>இன்றும்</span> <span>பறைசாற்றி</span> <span>நிற்கின்றன</span>.<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh8473FYjNo24lnHEcXlb7-QncSGTLXJHVP-PjLiQHXcPxt9vEuZa3jDsmwk9uPiQ-tOaVfgHgAQdOXLQIOhyphenhyphenimflVzQDHgfr8UVE4BssuVMC488CFXYxT6MicsOqd79Qn-kKZE560dxulh/s1600/Noyyal_1.jpg"><img style="float: left; margin: 0pt 10px 10px 0pt; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh8473FYjNo24lnHEcXlb7-QncSGTLXJHVP-PjLiQHXcPxt9vEuZa3jDsmwk9uPiQ-tOaVfgHgAQdOXLQIOhyphenhyphenimflVzQDHgfr8UVE4BssuVMC488CFXYxT6MicsOqd79Qn-kKZE560dxulh/s320/Noyyal_1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5482523059752132754" border="0" /></a><br /><span>நொய்யல்</span> <span>படுகையால்</span> 3,500 <span>சதுர</span> <span>கி</span>.<span>மீ</span>., <span>பரப்பு</span> <span>பயனடைகிறது</span>; 1800 <span>ச</span>.<span>கி</span>.<span>மீ</span>., <span>பரப்பு</span><span>பாசனவசதி</span> <span>பெறுகிறது</span>(!). <span>கரையோரப்</span><span>பகுதிகளில்</span> <span>உள்ள</span> <span>கிராமங்களில்</span> <span>மக்கள்</span><span>அடர்த்தி</span> <span>சதுர</span> <span>கி</span>.<span>மீ</span>.,<span>க்கு</span> 120 <span>பேர்</span>; <span>நகரப்பகுதியில்</span> 1,000 <span>பேர்</span>.<br /><span>நொய்யல்</span> <span>ஒரு</span> <span>போதும்</span> <span>கரை</span> <span>மீறியதாக</span><span>சரித்திரம்</span> <span>இல்லை</span>. <span>காரணம்</span> <span>ஒவ்வொரு</span><span>கி</span>.<span>மீ</span>., <span>து</span>õ<span>ரத்திலும்</span> <span>சில</span> <span>அடிது</span>õ<span>ரம்</span><span>ஆழமாகிக்</span> <span>கொண்டே</span> <span>செல்லும்</span><span>தன்மையால்</span>, <span>சரிவான</span> <span>சிற்றாறாக</span><span>உருக்கொண்டு</span> <span>அதிவேகமாக</span> <span>காவிரியில்</span> <span>கலக்கிறது</span>. <span>இதனால்</span>, <span>ஆறு</span> <span>நிறைய</span><span>தண்ணீர்</span> <span>செல்வதற்கு</span> <span>வழியில்லை</span>. <span>பெரிய</span> <span>அளவிலான</span> <span>தேக்கங்களும்</span> <span>இல்லை</span>.<br /><span>மற்ற</span> <span>சிற்றாறுகளைப்</span> <span>போல</span> <span>குளிக்கவும்</span>, <span>குடிக்கவும்</span> <span>பயன்பட்டு</span> <span>வந்த</span> <span>இந்த</span> <span>நதி</span>, <span>சென்ற</span> <span>தலைமுறையில்</span> <span>சிற்றாறு</span> <span>என்ற</span> <span>நிலையில்</span> <span>இருந்து</span> <span>கழிவுக்</span> <span>கால்வாயாக</span><span>சுருங்கிக்</span> <span>கொண்டது</span>.<br /><br /><span style="font-weight: bold;">மாசடைந்த</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">நொய்யல்</span><span style="font-weight: bold;">:</span><br /><span>இன்றைய</span> <span>தலைமுறையினர்</span> <span>காணும்</span> <span>நொய்யல்</span>, <span>நதி</span> <span>என்ற</span> <span>தகுதியை</span> <span>இழந்தது</span><span>ம்</span> <span>ஆண்டுக்குப்</span> <span>பிறகுதான்</span>. <span>தொழில்</span> <span>வளர்ச்சி</span> <span>என்ற</span> <span>பெயரில்</span>, <span>திருப்பூர்</span> <span>நகரம்</span><span>அரசின்</span> <span>எந்த</span> <span>உதவியும்</span>, <span>கட்டுப்பாடுகளும்</span> <span>இன்றி</span> <span>வளர்ந்த</span> <span>காலகட்டம்</span> <span>அது</span>. <span>வெளிநாடுகளுக்குப்</span> <span>பனியனை</span> <span>ஏற்றுமதி</span> <span>செய்ய</span> <span>வாய்ப்பு</span> <span>கிடைத்ததால்</span>, <span>தொழில்</span><span>முனைவோர்கள்</span> <span>பலரும்</span>, <span>போட்டி</span> <span>போட்டுக்</span> <span>கொண்டு</span> <span>உற்பத்தி</span> <span>செய்தனர்</span>.<br /><span>தொழில்</span> <span>வளர்ச்சியில்</span> <span>மட்டுமே</span> <span>அக்கறை</span> <span>கொண்டிருந்த</span> <span>கனவான்களுக்கும்</span>, <span>அதன்</span> <span>மூலம்</span> <span>கிடைக்கும்</span> <span>அன்னிய</span> <span>செலாவணியை</span> <span>நல்வாய்ப்பாக</span> <span>கருதிய</span><span>அரசும்</span>, <span>அதன்</span> <span>மோசமான</span> <span>மறுபக்கத்தைக்</span> <span>கவனிக்கத்</span> <span>தவறிவிட்டன</span>. <span>ஏற்கனவே</span>, <span>கோவை</span> <span>மாநகரின்</span> <span>கழிவுகள்</span> <span>நொய்யலில்</span> <span>கலந்து</span>, <span>அதை</span> <span>மாசுபடுத்திக்</span><span>கொண்டிருந்தன</span>.<br /><span>வெள்ளை</span> <span>நிற</span> <span>ஆடைகளை</span> <span>விட</span> <span>வண்ணமேற்றிய</span> <span>ஆடைகளுக்கு</span> <span>வரவேற்பு</span><span>என்பதை</span> <span>அறிந்த</span> <span>திருப்பூர்</span> <span>தொழிலதிபர்கள்</span>, <span>சாய</span> <span>சலவை</span> <span>ஆலைகளை</span><span>அதிகளவில்</span> <span>அமைத்தனர்</span>. <span>சுற்றுச்சூழல்</span> <span>காரணங்களுக்காக</span> <span>வெளிநாடுகளில்</span><span>கடும்</span> <span>கட்டுப்பாடுகள்</span> <span>விதிக்கப்பட்டிருந்த</span> <span>சாயமேற்றும்</span> <span>முறை</span>, <span>திருப்பூரில்</span><span>தடையின்றி</span> <span>நடந்தது</span>.<br /><span>அதன்</span> <span>கழிவுகளைச்</span> <span>சுத்திகரித்து</span> <span>வெளியில்</span> <span>விட</span> <span>வேண்டிய</span> <span>அவசியம்</span> <span>குறித்து</span><span>தொழில்முனைவோர்கள்</span> <span>அறிந்திருக்கவில்லை</span>. <span>உண்மையை</span> <span>சொல்வதானால்</span>, <span>அதுகுறித்த</span> <span>அறிவு</span> <span>அவர்களுக்கு</span> <span>இருக்க</span> <span>வேண்டும்</span> <span>என்ற</span> <span>கட்டாயம்</span> <span>இல்லை</span>; <span>அவர்களுக்கு</span> <span>உற்பத்தி</span> <span>மட்டுமே</span> <span>செய்யத்</span> <span>தெரியும்</span>; <span>அதன்</span> <span>கழிவுகளை</span> <span>சுத்திகரிக்க</span>, <span>அந்தத்துறையில்</span> <span>விற்பன்னர்கள்</span> <span>அல்ல</span> <span>அவர்கள்</span>.<br /><span>சாயக்கழிவை</span> <span>சுத்திகரிக்கும்</span> <span>பொறுப்பை</span> <span>ஏற்றிருக்க</span> <span>வேண்டிய</span> <span>அரசு</span> <span>நிர்வாகம்</span><span>அசட்டுத்தனமாக</span> <span>இருந்து</span> <span>விட்டது</span>. <span>விழிப்புணர்வும்</span>, <span>தொழில்நுட்ப</span> <span>வசதிகளும்</span><span>பெருகி</span> <span>விட்ட</span> <span>இக்காலத்திலேயே</span> <span>இன்னும்</span> <span>தீர்வு</span> <span>காணப்படவில்லை</span>; 25 <span>ஆண்டுகளுக்கு</span> <span>முன்</span> <span>அரசு</span> <span>நிர்வாகம்</span> <span>எப்படி</span> <span>அக்கறை</span> <span>காட்டியிருக்கும்</span>.<br /><span>ஆனால்</span>, <span>அதற்கான</span> <span>பலனை</span> <span>அரசு</span> <span>அனுபவித்ததே</span> <span>இல்லையோ</span>, <span>பொதுமக்களும்</span>, <span>விவசாயிகளும்</span> <span>நன்கு</span> <span>உணர்ந்தனர்</span>. <span>ஒரு</span> <span>நதி</span>, <span>பெரிய</span> <span>கழிவு</span> <span>நீர்</span> <span>கால்வாயாகி</span><span>நிலத்தடி</span> <span>நீர்</span> <span>மாசடைந்தது</span>.<br /><span>போதாக்குறைக்கு</span> <span>பிளாஸ்டிக்</span> <span>கழிவுகளும்</span> <span>நதியின்</span> <span>வேகத்தைத்</span> <span>தடை</span> <span>செய்து</span>, <span>தேங்கிய</span> <span>சாக்கடை</span> <span>ஆக்கி</span> <span>விட்டன</span>. <span>விவசாயிகளுக்காகக்</span> <span>கட்டப்பட்ட</span><span>ஒரத்துப்பாளையம்</span> <span>அணையில்</span> <span>சாயக்கழிவுகள்</span> <span>தேங்கி</span> <span>நின்றன</span>. <span>கால்நடைகள்</span><span>இனவிருத்தி</span> <span>செய்யாமல்</span> <span>மலடாகிப்போகின</span>. <span>அணையை</span> <span>சுற்றிலும்</span> <span>இருந்த</span><span>விவசாய</span> <span>நிலங்களில்</span> <span>களை</span> <span>கூட</span> <span>முளைக்கவில்லை</span>. <span>தென்னை</span> <span>மரத்தின்</span><span>இளநீரிலும்</span> <span>ரசாயனத்தின்</span> <span>காரத்தன்மை</span> <span>கலந்தது</span>. <span>குடிநீர்</span> <span>இன்றி</span>, <span>மக்களும்</span>, <span>கால்நடைகளும்</span> <span>பரிதவித்தனர்</span>. <span>தோல்நோய்</span> <span>மருத்துவமனையும்</span>, <span>செயற்கை</span><span>கருத்தரிப்பு</span> <span>மையங்களும்</span> <span>அதிகளவில்</span> <span>ஈரோடு</span> <span>சுற்றுப்பகுதியில்</span> <span>அமைந்தன</span>.<br /><span>பிரச்னையின்</span> <span>தீவிரத்தை</span> <span>தாமதமாக</span> <span>உணர்ந்த</span> <span>விவசாய</span> <span>சங்கங்கள்</span> <span>எதிர்ப்பு</span><span>குரல்கொடுக்க</span> <span>துவங்கின</span>. <span>சாய</span> <span>ஆலைகளின்</span> <span>கழிவுகளைச்</span> <span>சுத்திகரித்து</span> <span>விட</span><span>வேண்டும்</span> <span>என்ற</span> <span>கோஷம்</span>, <span>விவசாயிகளால்</span> <span>கத்தித்</span> <span>தீர்க்கப்பட்டது</span>. <span>சமூக</span><span>அக்கறையுள்ள</span> <span>அமைப்புகள்</span> <span>நொய்யலை</span> <span>மீட்டெடுக்க</span> <span>வேண்டும்</span> <span>என்ற</span><span>கோஷத்தை</span> <span>வலியுறுத்தின</span>. <span>பல்வேறு</span> <span>கட்ட</span> <span>முயற்சிகளுக்குப்</span> <span>பின்</span>, <span>கோர்ட்</span><span>தலையீட்டின்</span> <span>காரணமாக</span> <span>நச்சுத்தன்மை</span> <span>வாய்ந்த</span> <span>கழிவு</span> <span>நீர்</span> <span>வெளியேற்றத்துக்கு</span><span>தடை</span> <span>விதிக்கப்பட்டது</span>. <span>பாதிக்கப்பட்ட</span> <span>விவசாயிகளுக்கு</span> <span>நஷ்ட</span> <span>ஈடு</span> <span>வழங்க</span><span>வேண்டும்</span> <span>எனவும்</span> <span>உத்தரவிடப்பட்டது</span>.<br /><span>கோர்ட்</span> <span>உத்தரவின்</span> <span>காரணமாக</span>, <span>அனைத்து</span> <span>சாய</span> <span>ஆலை</span> <span>உரிமையாளர்களும்</span> 800 <span>கோடி</span> <span>ரூபாய்</span> <span>மதிப்பில்</span> 20 <span>இடங்களில்</span> <span>பொது</span> <span>சுத்திகரிப்பு</span> <span>நிலையங்கள்</span><span>அமைத்துள்ளனர்</span>. <span>சிலர்</span> <span>சொந்தமாகவும்</span> <span>அமைத்துள்ளனர்</span>.<br /><span>இருப்பினும்</span> <span>இந்த</span> <span>வினாடி</span> <span>வரை</span> <span>சுத்திகரிக்கப்படாத</span> <span>சாயக்கழிவுகள்</span> <span>நொய்யலில்</span><span>கலக்கிறது</span>.<br /><span>தொழில்</span> <span>துவங்குவது</span> <span>குறித்த</span> <span>அரசின்சிறு</span> <span>கட்டுப்பாடுகளே</span> <span>இப்பிரச்னையை</span><span>முளையிலேயே</span> <span>தடுத்திருக்கும்</span>. <span>மாசுக்கட்டுப்பாட்டு</span> <span>துறை</span>, <span>தன்</span> <span>வேலையில்</span><span>ஒரு</span> <span>சதவீதத்தை</span> <span>கூட</span> <span>செய்யவில்லை</span>. <span>இல்லாவிட்டால்</span> <span>ஒரு</span> <span>நதியே</span> <span>அழிந்து</span><span>போயிருக்காது</span>.<br /><span>திருப்பூர்</span> <span>நகரத்தின்</span> <span>மேற்கு</span> <span>எல்லையில்</span> <span>நொய்யல்</span> <span>நதி</span>, <span>முழுமையான</span><span>சாக்கடையாக</span> <span>மாறத்துவங்குகிறது</span>. <span>பெரியாண்டிபாளையத்தில்</span> <span>இருந்து</span> <span>சாய</span>, <span>சாக்கடைக்கழிவுகள்</span> <span>அதிகளவில்</span> <span>நொய்யலில்</span> <span>கலக்கின்றன</span>. <span>கழிவுகள்</span><span>மட்டுமன்றி</span>, <span>ஆக்கிரமிப்புகளும்</span> <span>நொய்யலை</span> <span>உருக்குலையச்</span> <span>செய்துள்ளன</span>.<br /><span>ஒரு</span> <span>நதி</span> <span>நம்</span> <span>கண்முன்னால்</span> <span>உயிர்ப்பை</span> <span>இழந்து</span> <span>கொண்டிருப்பது</span> <span>குறித்து</span> <span>எந்த</span><span>அரசியல்வாதிக்கும்</span> <span>அக்கறை</span> <span>இல்லை</span>.<br /><br /><span style="font-weight: bold;">ஆக்கிரமிப்புகள்</span><span style="font-weight: bold;">:</span><br /><span>பரந்து</span> <span>விரிந்த</span> <span>நொய்யல்</span>, <span>ஆக்கிரமிப்புகளால்</span> <span>பல</span> <span>இடங்களில்</span> <span>சிறு</span> <span>கால்வாய்</span><span>அளவுக்கு</span> <span>சுருங்கிப்</span> <span>போயுள்ளது</span>. <span>திராவிட</span> <span>கழகங்களின்</span> <span>முக்கிய</span><span>வரலாற்றுச்சம்பவமாக</span> <span>கருதப்படும்</span> <span>ஈ</span>.<span>வே</span>.<span>ரா</span>., <span>அண்ணாதுரை</span> <span>சந்திப்பு</span> <span>நடந்த</span><span>பொதுக்கூட்டம்</span> <span>நொய்யலின்</span> <span>நதிக்கரையில்</span> <span>நடந்தது</span>. <span>கட்சிக்கூட்டங்கள்</span>, <span>பொது</span><span>விழாக்கள்</span> <span>அனைத்தும்</span> <span>மாநகராட்சி</span> <span>அலுவலகம்</span> <span>அமைந்துள்ள</span> <span>இடத்துக்கு</span><span>அருகே</span>, <span>மணற்பரப்பில்</span> <span>நடக்கும்</span>. <span>அந்த</span> <span>அளவுக்கு</span> <span>அங்கு</span> <span>இடவசதி</span> <span>இருந்தது</span>. <span>இன்று</span> <span>அப்பகுதி</span> <span>வழியாக</span> <span>நடந்து</span> <span>கூடச்</span> <span>செல்ல</span> <span>முடியாது</span>. <span>நொய்யல்</span> <span>கரை</span><span>தனியார்களின்</span> <span>ஆக்கிரமிப்பில்</span> <span>உள்ளது</span>. <span>நொய்யலின்</span> <span>இரு</span> <span>கரைப்பகுதியும்</span> <span>வழி</span><span>நெடுக</span> <span>ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன</span>.<br /><span>வெளிமாவட்டங்களில்</span> <span>இருந்து</span> <span>குடியேறியவர்களுக்கு</span> <span>நொய்யல்</span> <span>நதிக்கரை</span><span>புகலிடம்</span> <span>அளித்தது</span>. <span>அப்போதைய</span> <span>நகராட்சி</span> <span>நிர்வாகம்</span>, <span>குடியிருப்புகளுக்காக</span><span>நொய்யல்</span> <span>ஆக்கிரமிக்கப்படுவதை</span> <span>தடுக்கவில்லை</span>. <span>இன்று</span>, <span>ஆக்கிரமிப்புகளை</span><span>அகற்றினால்</span>, <span>அரசியல்கட்சிகள்</span> <span>லட்சக்கணக்கான</span> <span>ஓட்டுகளை</span> <span>இழக்க</span> <span>நேரிடும்</span>.<br /><span>ஒரு</span> <span>ஓட்டுக்கு</span> <span>எதிராகக்</span> <span>கூடத்</span> <span>தங்கள்</span> <span>சுட்டுவிரலையும்</span> <span>அசைக்க</span> <span>விரும்பாத</span><span>அரசியல்</span> <span>கட்சிகள்</span>, <span>ஆறு</span> <span>ஆக்கிரமிக்கப்படுவதைத்</span> <span>தடுக்கவில்லை</span>. <span>ஒரு</span> <span>ஆறு</span>, <span>சிறு</span> <span>கால்வாயாக</span> <span>மாறிப்போனதற்கு</span> <span>இதுவே</span> <span>காரணம்</span>.<br /><span>நொய்யலை</span> <span>சீரமைக்க</span> <span>பொதுப்பணித்துறை</span> <span>நடவடிக்கை</span> <span>எடுக்கவில்லை</span>; <span>புறக்கணித்து</span> <span>விட்டது</span>. <span>மணல்</span> <span>வளம்</span> <span>இருந்திருந்தால்</span>, <span>கொள்ளையடிக்கவாவது</span><span>அரசியல்வாதிகள்</span> <span>முண்டியடித்திருப்பர்</span>. <span>பல</span> <span>வழிகளிலும்</span> <span>தண்ணீர்</span> <span>வரத்து</span><span>குறைந்ததால்</span>, <span>நீரோட்டமின்றி</span> <span>மணல்</span> <span>வளமும்</span> <span>குறைந்து</span> <span>விட்டது</span>.<br /><br /><span style="font-weight: bold;">நொய்யலை</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">சீரமைக்க</span><span style="font-weight: bold;">:</span><br /><span>கொங்கின்</span> <span>நாகரீகத்துக்கு</span> <span>வேராக</span> <span>இருந்த</span> <span>நதி</span>, <span>வெறும்</span> 25 <span>ஆண்டுகளில்</span><span>இல்லாமல்</span> <span>போய்விட்டது</span>. <span>இனியாவது</span> <span>அரசாங்கம்</span> <span>விழித்துக்</span><span>கொள்ளாவிட்டால்</span>, <span>நொய்யல்</span> <span>என்ற</span> <span>பெயரைச்</span> <span>செவிவழியாக</span> <span>மட்டுமே</span> <span>கேட்க</span><span>முடியும்</span>.<br /><span>நொய்யலை</span> <span>நேரடியாகச்</span> <span>சீரமைத்து</span> <span>விட</span> <span>முடியாது</span>. <span>சங்கிலித்</span> <span>தொடர்</span> <span>போல்</span>, <span>பல்வேறு</span> <span>பிரச்னைகளுக்கும்</span> <span>தீர்வு</span> <span>கண்டு</span>, <span>சில</span> <span>நடைமுறைகளைக்</span><span>கையாண்டால்</span> <span>மட்டுமே</span> <span>சாத்தியம்</span>.<br />*<span>திருப்பூர்</span> <span>மாநகரில்</span> <span>பிளாஸ்டிக்</span> <span>கழிவுகளுக்கு</span> <span>தடைவிதிக்க</span> <span>வேண்டும்</span>. <span>சாக்கடைக்கழிவுகள்</span> <span>நொய்யலில்</span> <span>கலக்கும்</span> <span>போது</span>, <span>பிளாஸ்டிக்</span> <span>கழிவுகள்</span><span>நீரோட்டத்தை</span> <span>தடை</span> <span>செய்கின்றன</span>.<br />*<span>சுத்திகரிப்பு</span> <span>நிலையங்களில்</span> <span>இருந்து</span> <span>வெளியேற்றப்படும்</span> <span>கழிவு</span> <span>நீர்</span>, <span>நச்சுத்தன்மை</span> <span>இல்லாமல்</span> <span>இருப்பினும்</span>, <span>ஆற்றில்</span> <span>கலப்பதை</span> <span>தடை</span> <span>செய்ய</span><span>வேண்டும்</span>. <span>ஒரு</span> <span>சொட்டுக்</span> <span>கழிவு</span> <span>நீர்</span> <span>கூட</span> <span>ஆற்றில்</span> <span>கலக்காமல்</span> <span>குழாய்</span> <span>மூலம்</span><span>அப்புறப்படுத்தப்பட</span> <span>வேண்டும்</span>.<br />*<span>நொய்யலின்</span> <span>பாதையில்</span> <span>உள்ள</span> <span>எந்த</span> <span>உள்ளாட்சி</span> <span>பகுதியில்</span> <span>இருந்தும்</span> <span>சாக்கடைக்</span><span>கழிவுகள்</span> <span>நொய்யலில்</span> <span>கலக்க</span> <span>தடை</span> <span>விதிக்க</span> <span>வேண்டும்</span>.<br />*<span>நொய்யலைத்</span> <span>தூர்வார</span> <span>வேண்டும்</span>. <span>ஆக்கிரமிப்புகளைப்</span> <span>பாரபட்சமின்றி</span> <span>அகற்ற</span><span>வேண்டும்</span>. <span>நொய்யலால்</span> <span>நீராதாரம்</span> <span>பெறும்</span> <span>குளங்களையும்</span> <span>தூர்வார</span> <span>நடவடிக்கை</span><span>எடுக்க</span> <span>வேண்டும்</span>. <span>இத்திட்டங்களுக்காகச்</span> <span>சில</span> <span>ஆயிரம்</span> <span>கோடிகள்</span> <span>தேவைப்படும்</span>. <span>ஆயினும்</span>, <span>இப்பகுதி</span> <span>மக்களின்</span> <span>வாழ்வாதாரத்தை</span> <span>தன்</span> <span>மெத்தனப்போக்கால்</span><span>சிதைத்து</span> <span>விட்ட</span> <span>அரசு</span>, <span>பணத்தைச்</span> <span>செலவழித்தே</span> <span>ஆக</span> <span>வேண்டும்</span>.<br />*<span>கோர்ட்டில்</span> <span>உள்ள</span> <span>நொய்யல்</span> <span>தொடர்பான</span> <span>வழக்குகளை</span> <span>அனைத்து</span> <span>தரப்பும்</span><span>வாபஸ்</span> <span>பெற்று</span>, <span>நேரடியான</span> <span>தனிக்குழு</span> <span>மூலம்</span> <span>பேச்சுவார்த்தை</span> <span>நடத்த</span> <span>வேண்டும்</span>. <span>அல்லது</span> <span>விரைவு</span> <span>நீதிமன்றம்</span> <span>மூலம்</span> <span>மூன்று</span> <span>மாதங்களுக்குள்</span> <span>தீர்வு</span> <span>காண</span><span>வேண்டும்</span>.<br /><span style="font-weight: bold;">போக்குவரத்து</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">வசதி</span>:<br /><span>கோவையில்</span> <span>இருந்து</span> <span>கரூர்</span> <span>வரை</span>, <span>நொய்யலின்</span> <span>இரு</span> <span>கரையையும்</span> <span>அகலப்படுத்தி</span>, <span>ரோடு</span> <span>அமைக்கலாம்</span> <span>என்ற</span> <span>திட்டம்</span> <span>கடந்த</span> <span>காலங்களில்</span> <span>முன்மொழியப்பட்டு</span><span>இருந்தது</span>. <span>ஆற்றின்</span> <span>கரை</span> <span>சுத்தப்படுத்தப்படும்</span>. <span>ரோடு</span> <span>வசதியும்</span> <span>உருவாகும்</span>. <span>ஆக்கிரமிப்புகளையும்</span> <span>தடுக்க</span> <span>முடியும்</span>. <span>போக்குவரத்து</span> <span>நெரிசலுக்கும்</span> <span>தீர்வு</span><span>கிடைக்கும்</span>. <span>சென்னையை</span> <span>சுற்றி</span> <span>மட்டுமே</span> <span>ஆயிரக்கணக்கான</span> <span>கோடி</span> <span>ரூபாய்களை</span><span>செலவழிக்கும்</span> <span>அரசு</span> <span>இத்திட்டத்தையும்</span> <span>கவனத்தில்</span> <span>கொள்ள</span> <span>வேண்டும்</span>. <span>கொங்கு</span><span>மண்டலத்துக்குள்</span> <span>மெட்ரோ</span> <span>போன்ற</span> <span>ரயில்</span> <span>திட்டம்</span> <span>உருவாக்கம்</span> <span>வேண்டும்</span> <span>என்ற</span><span>கோரிக்கை</span> <span>உள்ளது</span>. <span>இதற்கு</span> <span>மத்திய</span> <span>அரசின்</span> <span>ஒப்புதல்</span> <span>தேவை</span>. <span>ஆனால்</span>, <span>நொய்யல்</span> <span>கரையில்</span> <span>ரோடு</span> <span>வசதியை</span> <span>உருவாக்க</span> <span>மத்திய</span> <span>அரசை</span> <span>எதிர்நோக்க</span><span>வேண்டிய</span> <span>அவசியம்</span> <span>இருக்காது</span>. <span>போக்குவரத்து</span> <span>பிரச்னைக்கும்</span> <span>தீர்வு</span> <span>கிடைக்கும்</span>. <span>முழுமையான</span> <span>ரோடாக</span> <span>இல்லாவிட்டாலும்</span>, <span>முக்கிய</span> <span>இணைப்புகள்</span> <span>வரை</span> <span>ரோடு</span><span>அமைக்கலாம்</span>. <span>அந்த</span> <span>ரோட்டை</span> <span>தாண்டியே</span> <span>கழிவுகளை</span> <span>ஆற்றில்</span> <span>கலக்க</span> <span>முடியும்</span><span>என்பதால்</span>, <span>கழிவுகள்</span> <span>கலப்பதும்</span> <span>தடுக்கப்படும்</span>.<br /><span>புறநகர்</span> <span>வழிச்சாலை</span>; <span>தொழில்வளர்ச்சி</span> <span>என</span> <span>பல</span> <span>பரிமாணங்களிலும்</span> <span>இத்திட்டம்</span><span>பலனளிக்கும்</span>.<br /><br /><span>நொய்யல்</span> <span>என்ற</span> <span>நதியையே</span> <span>இல்லாமல்</span> <span>செய்து</span> <span>விட்ட</span> <span>இந்த</span> <span>தலைமுறை</span>, <span>இனப்படுகொலைக்குச்</span> <span>சமமான</span> <span>பாதகத்கைச்</span> <span>செய்துள்ளது</span>. <span>வாருங்கள்</span><span>யாரேனும்</span> <span>பூனைக்கு</span> <span>மணி</span> <span>கட்டுங்கள்</span>. <span>நொய்யலைச்</span> <span>சீரமைக்காவிட்டால்</span>, <span>வருங்காலம்</span> <span>நம்மைத்</span> <span>தூற்றும்</span>.</span> 12 1985 </div>பாற்கடல் சக்திhttp://www.blogger.com/profile/07253897296826971596noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8247139698668666419.post-87895310781270569042010-05-31T08:37:00.000-07:002010-05-31T08:40:03.748-07:00மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தறாங்களாம்...அன்பார்ந்த பெரி யோர்களே, தாய்மார்களே நண்டுகளே, சிண்டுகளே, குஞ்சுகளே, குளுவான்களே... உங்க எல்லாருக்கும் ஒரு விஷயம் சொல்லப் போறணுங்க...<br />தண்டோரா போடறப்போ இங்கேதான் உங்க கவனம் இருக்கணும். அதாவது நாளைல இருந்து மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்போறாங்க.<br />முதல்கட்டமாக 45 நாளைக்கு வீட்டுப்பட்டியல் கணக்கெடுக்கறாங்க. அப்புறமா... வர்ற 2011 பிப்ரவரி மாதத்துல முழுமையான கணக்கெடுப்பு.<br />தேசிய மக்கள் தொகை பதிவேடு ஒன்ன இந்திய அரசாங்கம் தயாரிக்குது. அதுல, எல்லா இந்தியர்களோட எல்லா விவரங்களும் சேர்க்கப்போறாங்களாம். கைரேகைல இருந்து கண் அடையாளம் வரைக்கும் தேசிய அடையாள அட்டையா பதிஞ்சு கொடுக்கப் போறாங்களாம்.<br />எனவே, அடுத்து வர்ற 45 நாளைக்கு உங்க ஏரியா பக்கம் வர்ற கணக்கெடுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கணுமுங்க. தப்பித்தவறி உங்க வீட்டுக்கு கணக்கெடுப்பாளர்கள் வரலைன்னா நீங்களே முன்வந்து யாரு கணக்கெடுப்பாளர்னு பாத்து, உங்களப் பத்தின தகவல்களை கொடுத்துருங்க சாமீ... 150 வீடுகளுக்கு ஒரு கணக்கெடுப்பாளர்னு உங்ககிட்ட 35 கேள்விக கேப்பாங்க.<br />அந்த கேள்விகளுக்கு மறைக்காம பதில் சொல்லுங்க. இன்னொரு சந்தோஷமான விஷயம் என்னன்னா? உங்களப்பத்தின தகவல்கள் எல்லாமே ரகசியமா வைத்துக் கொள்ளப்படும். தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கூட வேற யாருக்கும் சொல்ல மாட்டாங்க; சொல்லவும் கூடாது. அதுனால, தயவு செஞ்சு கணக்கெடுப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்க சாமியோ...வ்பாற்கடல் சக்திhttp://www.blogger.com/profile/07253897296826971596noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8247139698668666419.post-62444230295526237272010-05-27T08:24:00.001-07:002010-05-27T08:26:34.083-07:00வா... வந்து தொலையுங்கள்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg3GznNSjL7fMs8zXwqJ0v67aZui2lbrPyl7dW6PUq1bIOc9Mqe3f6GYn3hu7aHHnbZW6wGdxHThT8OgDkN8wMR-N8aTqh2DYQ_AsANFqGA4YOjBZbCvi6dKmZi4l79E4RZZTWHu6_5nffD/s1600/River_Of_Blood_III.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg3GznNSjL7fMs8zXwqJ0v67aZui2lbrPyl7dW6PUq1bIOc9Mqe3f6GYn3hu7aHHnbZW6wGdxHThT8OgDkN8wMR-N8aTqh2DYQ_AsANFqGA4YOjBZbCvi6dKmZi4l79E4RZZTWHu6_5nffD/s320/River_Of_Blood_III.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5475971258230297010" /></a><br /><br />ஏ... கூத்தாடிகளே!<br />வக்கற்றவன் ஒருவன்<br />வயிறெறிந்து சொல்கிறேன்<br />கேட்டுவிட்டுச் செல்லுங்கள்.<br /><br />ஈனப்பிறவிகளால் எம்மினம்<br />சீரழிக்கப்பட்டபோது,<br />சகோதரன் என்றுதானே<br />கை நீட்டினோம்.<br />எதிரி கூட எம்மிடம்<br />இரக்கம் காட்டியிருக்கக் கூடும்<br />ஆனால், நீங்கள் துரோகிகள்<br /><br /><br />இங்கு<br />பாலுக்கழுத குழந்தையின்<br />வாயில் கந்தகத்துகள்கள்<br />எரிந்தன.<br />தாயின் கருவறை வாயில்கள்<br />கயவரின் கால்களால்<br />மிதியுண்டன.<br /><br />அங்கோ...<br />பசப்பு வார்த்தைகளால்<br />பாலாபிஷேகம் செய்யும்<br />பாசத்தலைவனுக்கு<br />பாராட்டு விழா நடத்தினீர்.<br />தொடை தெரிய ஆடினீர்,<br />துண்டு போர்த்து பாடினீர்.<br /><br /><br />எல்லாம் முடிந்தது...<br />ரத்தச் சகதிக்குள்<br />புதைக்கப்பட்டது<br />ஓரினம்<br />எல்லாம்... முடிந்தது.<br /><br />அன்று அழைத்தோம்<br />கதறல்களால் காடுகள்<br />கூட கருகிப் போயின.<br />நீங்கள் வரவில்லை<br />இன்று மறுத்தோம்<br />வருவதாய்த் தகவல்<br /><br />வா... வந்து தொலையுங்கள்<br />எம் ரத்தச் சிதறல்களால்<br />அரிதாரம் பூசுங்கள்<br />சிசுக்களின் மண்டையோட்டில்<br />தேநீர் அருந்துங்கள்<br />நொறுங்கிய எம்<br />எலும்புகள் மீது<br />மேடை போடுங்கள்<br />உம் மதர்த்த முலைகள்<br />திமிரத்... திமிர...<br />ஆடுங்கள்<br />கொலை செய்த கைகள்<br />களைத்துப் போயிருக்கும்<br />சிரம பரிகாரம் செய்வியுங்கள்.<br />எம் பெண்களை<br />வன்புணர்ந்து வன்புணர்ந்து<br />அவர்களின் குறிகள்<br />வீங்கிப் போயிருக்கும்<br />வெஞ்சாமரம் வீசுங்கள்<br />அவர்கள் விட்டெறியும்<br />காசுகளால்<br />உங்களுக்கு உள்ளாடை<br />தைத்துக் கொள்ளுங்கள்.<br /><br />அத்தோடு இந்த வக்கற்றவனின்<br />வரத்தையும் வாங்கிக் கொள்ளுங்கள்.<br /><br />எம் பிணங்களின்<br />வாய்க்கரிசியில்<br />உமக்கான உணவு<br />சமைக்கப்படட்டும்<br />குடிநீர்க் குவளையில்<br />ரத்தம் ததும்பட்டும்<br />தூமைத் துணிகளில்<br />ஆடைகள் நெய்யப்படட்டும்<br />நும் மனைவிகளின்<br />வயிற்றில் கருந்தேள்<br />கருக்கொள்ளட்டும்<br />பூஜையறையில்<br />சாம்பிராணிக்குப் பதில்<br />சதைத்துணுக்குகள்<br />வேகட்டும்<br />உம் படுக்கை அறையில்,<br />கயவர்களால் சிதறடிக்கப்பட்ட<br />முதிராத என் தங்கையின்<br />கதறல் கேட்கட்டும்<br /><br />வா... வந்து தொலையுங்கள்பாற்கடல் சக்திhttp://www.blogger.com/profile/07253897296826971596noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-8247139698668666419.post-77056195475106839332010-05-15T23:52:00.000-07:002010-05-16T00:26:52.782-07:00பற்றி எரியும் சுயம்...<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEheEAgqgfB-tmcxtifcINWeUsUERwM5UZyYDSj6I65KjYKGBMSIrJQHslRQYKV8un-VmK6y98Lv5hYzdhOr_tCfqjOr116BQDF2C_7hQ9qEPbh8ZEmSfUI5sdn7yvteObys6FuhlF3yki3i/s1600/%252FF%2526S_IMG_2249_shrp.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEheEAgqgfB-tmcxtifcINWeUsUERwM5UZyYDSj6I65KjYKGBMSIrJQHslRQYKV8un-VmK6y98Lv5hYzdhOr_tCfqjOr116BQDF2C_7hQ9qEPbh8ZEmSfUI5sdn7yvteObys6FuhlF3yki3i/s320/%252FF%2526S_IMG_2249_shrp.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5471765395766700146" /></a><br />உனக்கும் எனக்குமான போரில்,<br />எனது வியூகத்தை தகர்க்க <br />உனக்கு சாத்தியமற்றுப் போனது.<br />உன்னை முன்னேற விடாமல்<br />தடுத்து விட்டது சுயத்தால் <br />பாதுகாக்கப்பட்ட என் சாம்ராஜ்யம்.<br />அகழி அடுத்த கற்சுவர்<br />உன் பிரவேச எண்ணத்தை<br />தேக்கியது.<br />என் சக பரிவாரங்களுடன்<br />போரிடவே உனக்கு<br />நேரம் போதவில்லை.<br />என்னை நேர் சந்திக்கும் பிரயத்னம்<br />பலனற்ற நிலையில்,<br />அனைத்து ஆயுதங்களையும்<br />கையிழந்தாய்.<br />சரணடைந்தேனும்<br />உட்புகுதல் என்ற கோரிக்கையும்<br />மறுதலிக்கப்பட்டது,<br />வெற்றிக் களிப்பில் நான்;<br />உன்னிடம் இருந்து<br />உதிர்ந்தன வார்த்தைகள்<br />"எல்லோரையும் போலத்தானே நீயும்'<br />அகழி தூர்ந்தது;<br />படை குலைந்தது;<br />கவசங்கள் நொறுங்கி,<br />நான் நிராயுதபாணியானேன்.<br />உன் அடுத்த தாக்குதல், போரை<br />முடிவுக்கு கொண்டு வந்து விடக்கூடும்.<br />ஆயுதப்பிரயோகத்தை நீ விரும்பவில்லை<br />இயலாமையும், ஏமாற்றமுமாய்<br />துயர மௌனத்துடன்<br />திரும்பினாய்.<br />அந்த வினாடியில் இருந்து<br />பற்றி எரிந்து கொண்டிருக்கிறது<br />என் சாம்ராஜ்யம்.பாற்கடல் சக்திhttp://www.blogger.com/profile/07253897296826971596noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8247139698668666419.post-5016571539882578362010-05-06T00:12:00.000-07:002010-05-06T00:38:09.693-07:00நண்பர்களாகப் பிரிவோம் என்றாய் நீ...<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgRUXkUgWD7_AHiJW3ffaXAwTghsGVda28JvNQAZFxCP3fKv3TQ8b6ZDaIsdnUsVkgZR7A3kt9csCT2mGtId7jqnZpxn4q18h9bPYJA-fdsTqnWGhE1Tjp4NIVML9-IriHbSNYfuB93Zewe/s1600/knife.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 116px; height: 116px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgRUXkUgWD7_AHiJW3ffaXAwTghsGVda28JvNQAZFxCP3fKv3TQ8b6ZDaIsdnUsVkgZR7A3kt9csCT2mGtId7jqnZpxn4q18h9bPYJA-fdsTqnWGhE1Tjp4NIVML9-IriHbSNYfuB93Zewe/s320/knife.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5468051817670134002" /></a><br /><br /><br />ஹக்...<br />கழுத்துக்கும் தோளுக்கும் இடையில்<br />எலும்புச் சந்துக்குள் அரை அடியைக்<br />கடந்தது ஈட்டி.<br />அதன் பின்னோக்கிய கூர்த்த<br />சிணுக்குகள் வலியின்<br />உச்சத்தைப் பரிசளித்தன.<br /><br />ராட்ஷச மரங்கள் பச்சைப்<br />புள்ளிகளாய்,<br />ஏரியும் குளமும் நீரின்<br />துளியாய் தெரிய,<br />மலை உச்சி.<br />கால் கட்டை விரலுக்கு முன்னால்<br />சரேலென பாய்ந்த<br />பள்ளம் ;<br />உயரத்தின் பயத்தை<br />உள்ளங்கால்கள் உணர்த்திய போது,<br />கால்களுக்குக் கீழ்<br />பூமி நழுவியது.<br />த்தட்...<br /><br />நீருக்குள் இருந்து காற்றுவெளியைத்<br />தேடிய கைகள் சலித்துப் போயின.<br />நுரையீரலின் கடைசிக் காற்றுக்<br />குமிழ் வெளியேறியது.<br />மூக்கை நம்பிப் பயனில்லை<br />சுவாசத்துக்காக துடித்த வாய் திறந்தபோது,<br />காற்றின் இடத்தை நீர்<br />நிரப்பியது.<br />ப்ளக்..<br /><br />இப்படியான ஒரு சூழ்நிலையில், <br />நண்பர்களாகப் பிரிவோம் என்றாய் நீ...பாற்கடல் சக்திhttp://www.blogger.com/profile/07253897296826971596noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8247139698668666419.post-1310264284905690112010-04-25T07:00:00.000-07:002010-04-25T07:11:46.916-07:00பிறழும் கலாச்சாரம்: திருமணமும் ஓட்டல் சாப்பாடும்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEho8gzaBg2CRcXOtFGi8MpK8yvF_V482OOTHrOWr5sM5uu3aZzdkNQnk24T6fayqj7U2KwY3e33MKOZ-6rPuemX6iDxhFSpBt9U3ZjVdkL0v9aSoQj3OUlfA9e95HxkYEdLfZHOceMc5TPN/s1600/Tamil_Sappadu.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 249px; height: 291px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEho8gzaBg2CRcXOtFGi8MpK8yvF_V482OOTHrOWr5sM5uu3aZzdkNQnk24T6fayqj7U2KwY3e33MKOZ-6rPuemX6iDxhFSpBt9U3ZjVdkL0v9aSoQj3OUlfA9e95HxkYEdLfZHOceMc5TPN/s320/Tamil_Sappadu.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5464076340122565842" /></a><br />சமீபத்தில் சக நண்பர்களுடன் தொழில் நிமித்த சுற்றுலா சென்று விட்டு ஊர் திரும்பிய போது, கொங்குமண்டலத்தில் புதிதாக முளைத்துள்ள நாகரிகம் என்ற பெயரிலான நடைமுறை ஒன்றின் மீது விவாதம் எழுந்தது. மூத்த பத்திரிகையாளரும் வழிகாட்டியுமான செல்வா அண்ணன் விவாதத்தைக் கிளப்பினார்.<br /><br />கோவை பகுதியில் சமீபகாலமாக திருமணத்தை கோவிலில் நடத்தி விட்டு, ஓட்டலில் சாப்பாடு போடுவது பற்றி விவாதித்த போதுதான், நிதர்சனம் செவிட்டில் அறைந்தது.<br />திருமணம் என்பது வாழ்வில் ஒரு முறை நிகழ்வது(பெரும்பாலும் அப்படித்தான்). உற்சாகமாகக் கொண்டாட வேண்டிய நிகழ்வு அது. உறவினர்கள் சூழ, கேலியும், கிண்டலுமாக வாழ்வின் அடுத்த அத்தியாயத்துக்கு துணையுடன் செல்லும் உற்சவம்.<br /><br />திருமணம் என்றால் பட்டு, நகை, மேளதாளம் இவற்றுடன் சாப்பாடும் முக்கியத்துவம் பெறுகிறது. திருமணத்துக்காக உறவினரைக் கூட்டி, பந்திபரிமாறா விட்டால், திருமணம் நடந்ததற்கான அர்த்தமே இல்லாமல் போய்விடும். ஆனால், சமீபகால நாகரீகம் இந்த முறைக்கே வேட்டு வைத்துவிட்டது. கோவிலில் சிறிய அளவில் திருமணத்தை முடித்து விடுகின்றனர். மதுரை மற்றும் சுற்றியுள்ள தென்மாவட்டங்களில் இன்னும் பெண் வீட்டார் உள்ள கிராமத்தில்தான் திருமணம் நடக்கிறது.<br /><br />ஆனால், கொங்கு மண்டலத்தில் பெரிய, பெரிய திருமண மண்டபங்கள் உள்ளன. வசதியைப் பறைசாற்றும் வகையில் பிரம்மாண்டமாக, வெரைட்டி வெரைட்டியாக சாப்பாடு போட்டு அசத்தும் திருமணங்களும் அரங்கேறும். ஆனால், வறுமையில் இருந்து திடீரென ஒரு ஐ.டி., கம்பெனியின் தயவால் மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் சில கனவான்களின் செயல்பாடு, மரபுகளை உடைத்து விடும் போலிருக்கிறது.<br /><br />சிம்பிளாக கல்யாணத்தை முடிக்கிறேன் பேர்வழி என்று, கோவிலில் திருமணத்தை முடித்து விட்டு, வந்த விருந்தினர்களுக்கு(விருந்தினர்கள் என்றே சொல்லக்கூடாது. உபசரித்தால்தான் விருந்தினர்கள்) கையில் டோக்கனை திணித்து விடுகின்றனர். அவர்களும் திருமண வீட்டார் கோவித்துக் கொள்ளக் கூடாதே என்ற காரணத்தினாலும், வைத்த மொய்க்கு இதையாவது தின்போம் என்ற அபிலாஷையாலும், ஓட்டல் வாசலில் காத்திருக்கின்றனர்.<br /><br />ஒரு பிச்சைக்காரனைப் போல், அடுத்தவன் சாப்பிட்டு எழுந்திருக்கும் வரை, அவன் டேஷூக்குப் பின்னால் காத்திருக்க வேண்டி இருக்கிறது. இது விருந்தையே அவமானப் படுத்துவது போல் இல்லையா? பிரம்மாண்டமாக திருமணம் நடத்தச் சொல்லவில்லை. உன்னால் பத்துப் பேருக்கு மட்டும் சாப்பாடு போட முடியும் என்றால், அதை நீயும், உன் உறவினர்களும் பரிமாறுங்கள்.<br /><br />திருமணத்துக்காக சாப்பாடு கூட போடமுடியவில்லை என்றால், அப்படி சம்பாதித்து என்ன செய்யப்போகிறாய். அதிலும், கிராமத்து உறவினனுக்கும், நகரத்தில் ஏழை நண்பனுக்கும் அழைப்பு விடுப்பதில்லை. சமூகத்தின் இந்த பிறழ்வுகளைத் திருத்த வேண்டிய அவசியம் சக மனிதன் என்ற முறையில் நமக்கும் இருக்கிறது. இந்த அதிபுத்திசாலித்தன கலாச்சாரம் அடுத்த தலைமுறைக்கான தவறான வழிகாட்டுதல். <br /> உங்கள் உறவினர்களிடம் சொல்லுங்கள். ஓட்டலில் சாப்பாடு போடுவதை விட, யாருக்கும் சொல்லாமல் பதிவுத் திருமணம் செய்து கொள்வது உத்தமம். குறைந்த பட்சம் அடுத்த தலைமுறையை "மிஸ் கைடு' செய்யாமல் இருக்கும் புண்ணியமாவது உங்களைச் சேரட்டும்.<br />செல்வா அண்ணனின் இந்த கூற்றை உடனிருந்த யாரும் மறுக்கவில்லை. உங்களில் யாருக்கேனும் ஆட்சேபணை இருந்தால் பதிவு செய்யுங்கள்.பாற்கடல் சக்திhttp://www.blogger.com/profile/07253897296826971596noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8247139698668666419.post-88635688575548383512010-04-02T00:00:00.000-07:002010-06-09T03:40:56.278-07:00பாலியல் தொழிலை அங்கீகரிக்கலாமா வேண்டாமா?பாலியல் தொழிலை அங்கீகரிக்கலாமா வேண்டாமா என்ற கடந்த 28 மார்ச்சில் இடப்பட்ட இடுகையின் தொடர்ச்சி...<br /><br />சிறிய அறிமுகம்...<br />கேரளத்தைச் சேர்ந்த பாலியல் தொழிலாளி நளினிஜமீலா பங்கேற்ற ஒரு விவாதத்தில் இருந்து. முன்னதாக அவர் சிறிய கருத்துரை ஒன்றை வழங்கியிருந்தார். அவரின் பேச்சைத் தொடர்ந்து கலந்துரையாடல் நடந்தது. முதலில் கேள்வி கேட்க பலரும் தயங்கினர்.<br />விவாதம் துவங்கும் போது கேள்வி கேட்க யாரும் இல்லை. ஒருவர் கேள்வி எழுப்பியதும், தயங்கித் தயங்கி கேள்வி கேட்டவர்கள், ஒரு கட்டத்தில் சூடுபறக்க விவாதத்தில் இறங்கினர்.<br />இனி விவாதத்தில் இருந்து....<br /><br />கேள்வி:<br /> * இத்தொழிலில் இருப்பவர்களை மீட்டு, கல்வி போன்ற வசதிகளைச் செய்து கொடுக்கலாமே. வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தால், திருந்தி ஒழுக்கமாக இருப்பார்களே?<br />பதில்:<br />* ""இரண்டு காரணங்கள் உள்ளன. அந்த தொழிலில் ஈடுபட்டுள்ள எல்லாருக்கும் வேலை கொடுக்கும் சூழ்நிலை இங்கு இல்லை. இரண்டாவது விஷயம். இம்மாதிரி ஆட்கள் திரும்பிச் சென்று சமூகத்தில் உரிய மரியாதையுடன் வாழ முடியாது. பாலியல் தொழில் இல்லாமல் போக வேண்டும் என்பது தான் எங்களின் விருப்பமும். ஆனால், இருக்காமல் போகாது. பெண்ணடிமைத்தனமும், பெண்ணை அடிமையாக்கும் குறிக்கோளை மட்டும் கொண்டு செயல்படும் குடும்ப நிறுவன அமைப்பும் இல்லாமல் போனால், பாலியல் தொழிலும் இல்லாமல் போகும். அதுவரை பாலியல் தொழிலை அங்கீகரிப்பது மன்னிக்கவும் வரைமுறைப்படுத்துவது என்ற நிலைப்பாடு தேவை''<br />கேள்வி:<br />* புத்தகம் வெளிவந்த பின், உங்கள் மீதான குழந்தைகளின் மனப்போக்கு; அவர்களின் மீது சமூகத்தின் பார்வை எப்படி இருந்தது?<br />பதில்:<br />* ""இரு பெண் குழந்தைகளில் மூத்தவள், ஆரம்பத்திலேயே என்னை விட்டு பிரிந்து விட்டாள். இரண்டாவது பெண்ணை, புத்தகம் எழுதிய பின் பல சமூக விவாத மேடைகளுக்கு அழைத்து வந்திருக்கிறேன். அவளுக்குத் தெரியும். அம்மா ஒரு பாலியல் தொழிலாளி என்று; அவள் என்னைப் புரிந்து கொண்டிருக்கிறாள். சமூகம் அவளை மனரீதியாக துன்புறுத்தவில்லை''<br />கேள்வி:<br />* பாலியல் தொழிலை கட்டுப்படுத்த சட்டமே தேவையில்லை; அதை தனிமனித ஒழுக்கமாக மாற்றி விடலாம்; சட்ட மீறலாகவோ, குற்றமாகவோ பார்க்கத் தேவையில்லை என்பது பற்றி கருத்து?<br />""சட்டம் வேண்டாம் என்று சொல்ல முடியாது. சுய விருப்பத்துடன் பாலியல் தொழிலுக்கு வந்தவர்களும், விபத்தாக தள்ளப்பட்டவர்களும் உண்டு. விபத்தாக தள்ளப்பட்டவர்கள், சமூக வாழ்க்கைக்கு திரும்ப, சட்டம் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும். பாலியல் தொழில் என்ற பெயரில், ஒரு பெண்ணை விற்பனை செய்ய சட்டம் தடையாக இருக்கும். எனவே, சட்டம் தேவை. ஆனால், ஒரு திருத்தம். இரண்டு பேர் சேர்ந்து விரும்பி இருக்கும் போது, அவர்களைக் கைது செய்யக்கூடாது. அவர்களைக் கேலி, கிண்டல் செய்யக்கூடாது என்பதே என் கண்ணோட்டம்''<br />கேள்வி:<br />* ஆண்களுக்கு பாலியல் வடிகால் தேவை காரணமாகவே, வெளியில் பாலியல் சீண்டல்களும், பாலியல் ஒடுக்குமுறைகளும் எழுகின்றன என்பது பொதுவான கருத்து. அப்படியானால், சட்டரீதியாக பாலியல் தொழில் அங்கீகரிக்கப்பட்ட பகுதிகளில், பெண்களின் மீது பாலியல் ஒடுக்குமுறையும் சீண்டல்களும் இல்லையா? அது சாத்தியமாகி இருக்கிறதா?<br />பதில்:<br />* டாக்டர் ஒருவர் குறுக்கிட்டு, ""ஆண்களின் வடிகாலுக்காக, பெண்கள் சார்ந்த பாலியல் தொழில் உள்ளது என்றால், பெண்களும் அவர்களின் வடிகாலுக்காக, ஆண் பாலியல் தொழிலாளர்களிடம் போகலாமா என்ற விவாதம் எழும். அப்படி யதார்த்தம் எழுமானால், அதையும் அங்கீகரிக்கலாம். பொருளாதார சுதந்திரம் வளமை பெற்ற மேட்டுக்குடிப் பெண்களில், அப்படிப்பட்ட ஒரு பிரிவும் இல்லாமல் இல்லை. சமூகத்தில் அப்படியும் ஒரு சிறு பிரிவு இல்லாமல் இல்லை,'' என்றார்.<br /><br />தீர்க்கமான கருத்துகளை முன்வைத்த ஜமீலா, ""தாய்லாந்து, கோல்கட்டா, மைசூர் பகுதிகளை உதாரணமாகக் காட்ட முடியும். மைசூரில் நான் செக்ஸ் ஒர்க்கராக இருந்துள்ளேன். அங்கு பஸ்சில் இருந்து இறங்கிய உடனே மிக சுதந்திரமாக நடந்திருக்கிறேன்.<br />கோல்கட்டாவில் சோனாகாச்சி என்ற இடத்தில் 60 ஆயிரத்துக்கும் அதிகமான பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர். எச்.ஐ.வி., விழிப்புணர்வு தொடர்பாக, அங்கே சென்ற போது, இரவு 12.00 மணிக்கு மதுக்கடையில் மது அருந்தி விட்டு, ரோட்டில் மிக சுதந்திரமாக உலவி இருக்கிறேன். கேலி, கிண்டல் இல்லை.<br />தாய்லாந்தில் சுகப்பேரியா என்ற பகுதி உள்ளது. புதிதாக திருமணமான தம்பதியினர், தன் தோழர்களுடன் சேர்ந்து அங்கு நடக்கும் "செக்ஸ் ஷோரூம்' நிகழ்ச்சிக்கு செல்வர். அங்கு, பாலியல் தொழிலாளி நிர்வாணமாக பல்வேறு விளையாட்டுகள், செயல் முறைகளை விளக்குவர். அதைப்பார்க்க நிறைய பேர் வருவர். அந்த புதுமண தம்பதியினர் இதில் வெட்கப்படுவதில்லை; அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட்டதில்லை.<br />"தேவையான பொருள், தேவையான இடத்தில் கிடைக்கும் போது, தேவையில்லாத சீண்டல்கள் இருக்காது,' என்பதே என் கருத்து. அதற்காக ஒரு குடும்பப் பெண்களின் மீதான சீண்டல் முற்றிலும் இருக்காது என்று கூறவில்லை; மிக மிகக் குறைந்து விடும் என்கிறேன்,'' என்றார்.<br /><br />ஒரு இளம்பெண் குறுக்கிட்டு, "தாய்லாந்து சென்றிருக்கிறேன். அங்கு பாலியல் தொழில் சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது. லாங்சபாங் என்ற பகுதியில் இதுதான் பிரதான தொழில். அடையாள அட்டை, தடுப்பு உபகரணங்கள் என அனைத்து விஷயங்களும் உண்டு. பாலியல் தொழிலாளிகளை அனைவரும் மதிக்கின்றனர். ரோடுகளில் சீண்டல் இல்லை.<br />ஆனால், எளிதாக இத்தொழிலில் காசு கிடைக்கிறது என்பதற்காக, இளம்பெண்கள் நிறைய பேர் வேலைக்குச் செல்வதில்லை; படிக்க செல்வதில்லை, என்ற புகார் உள்ளது. ஆட்கள் பற்றாக்குறையால், தொழில் துறை ஸ்தம்பிக்கிறது, என்ற குற்றச்சாட்டும் உள்ளது,'' என்றார்.<br /><br />"கஷ்டமில்லாத' என்ற வார்த்தையை மறுத்தபடி பேசினார் ஜமீலா. ""கோல்கட்டாவில், செக்ஸ் ஒர்க்கராக இருந்து கொண்டு, படித்து டாக்டரானவர்களும் உண்டு. பாலியல் தொழில் சுலபமானது இல்லை. கண்ணுக்கும் மனதுக்கும் பிடிக்காதவர்கள் வருவர். காசு கொடுக்காமல் ரகளை செய்பவர்களும் உண்டு. பாலுறவு, ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ வாரத்துக்கு ஒரு முறையே தேவைப்படும்.<br />ஆனால், தொழிலாக செய்யும் போது பலமுறை உறவு கொள்ள நேரிடும். அது கஷ்டம்தான். பணம் சம்பாதிக்க எளிது, ஈசி என்பதால், தொழிலில் இறங்கி விடுகின்றனர் என்று கூறி விட முடியாது. மனரீதியாகவும், உடல்ரீதியாகவும், சமூகரீதியாகவும் பாதிப்பு உண்டு.<br />மனைவியை இரண்டாம் முறை நெருங்கினால், <உடல்வலியால் மறுக்கின்றனர். அப்படியானால், பாலியல் தொழிலாளிக்கு ஏன் கஷ்டம் இருக்காது. நாங்களும் சாதாரண பெண் போன்ற உடலமைப்பு கொண்டவர்கள் தானே. சிலர் எங்களை அடிக்கும் போது, "ஓ' என கத்தக்கூட முடியாது. வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டால், அது கவலைப்பட வேண்டிய விஷயம்''<br />கேள்வி:<br />* பாலியல் தொழிலுக்கு அங்கீகாரம் தேவையா?<br />பதில்:<br />* ""தேவையற்ற பாலியல் கட்டுப்பாடுகள், அத்துமீறலுக்கு காரணமாக இருக்கின்றன. அதற்காக, எல்லாரும் இத்தொழிலுக்கு வந்து விடுங்கள் என்று அர்த்தமில்லை. பாலியல் கல்வி அனைவருக்கும் தேவை. சில எழுத்தாளர்கள் சொல்வது போல், பாலுறவு என்பது சொர்க்கானுபவம் இல்லை. சின்ன உணர்வு அவ்வளவே. நமக்கு சாதாரணமாக சிறுநீர் கழிக்கும் முன் ஏற்படும் உணர்வும்; கழித்த பின் கிடைக்கும் நிம்மதியையும் போன்றதே. மிக உயர்ந்த அனுபவம் எல்லாம் கிடையாது. ஆண் என்றால் இவ்வளவுதான், பெண் என்றால் இவ்வளவுதான், என இளைய தலைமுறைக்கு தெரியவைத்து விட்டால் போதும். பாலியல் அத்துமீறல்கள் குறைந்து விடும்.<br />பாலியல் தொழில் இருக்க வேண்டும்; இருந்தே தீர வேண்டும் என்று கூறவில்லை; பாலியல் தொழில் பாதுகாப்பு இயக்கம் எதையும் நடத்தவில்லை. ஆனால், பாலியல் குற்றங்கள் கட்டுப்படுத்தப்படாத போது, வரைமுறைக்குள் கொண்டு வரப்படாத போது, ஏராளமான தவறுகள் ஏற்படுகின்றன.<br />செய்தித்தாள்களில் குற்றம் தொடர்பான செய்திகள் பெரும்பாலும் செக்ஸ் தொடர்புடையவையாகவே இருக்கின்றன. பாலியல் தொழில் என்பதை தவிர்க்கவும், ஒழிக்கவும் முடியாத நிலையில், அதை வரன்முறைப்படுத்துவதில் தவறு இல்லை. உச்சநீதிமன்றமும் இக்கருத்தை ஏற்றுக்கொண்டுள்ளது,'' என்றார்.<br /><br />இப்படியாக விவாதம் நீண்டு கொண்டே இருந்தது. பாலியலைப் பற்றி சமூகத்தின் ஒரு தரப்பு என்ன நினைக்கிறதோ இல்லையோ; பெரும்பான்மை இளைய சமுதாயம் தெளிவாகவே இருக்கிறது.<br />வேண்டும், வேண்டாம் என்று சொல்லி விட, அது கடைச்சரக்கு இல்லை. தேவையற்ற கட்டுப்பாடு, விதிமீறலுக்கு வழி வகுக்கும். காட்டாற்று வெள்ளமாக கட்டவிழ்த்து விட்டால், கரையை உடைத்து விடும். கவனமாகக் கையாள்வது அவசியம். விவாதத்தில் பங்கேற்றவர்களில் பால்பேதமில்லை. பாலுக்கும், பாலியலுக்கும் அப்பாற்பட்டவர்களாகவே, பேச்சு இருந்தது. யாராகினும் விவாத அரங்கில் பங்கேற்றிருந்தால், இளைய சமுதாயம் தறிகெட்டுத் திரிகிறது என்ற வாக்கியத்தை சந்தேகமில்லாமல் வாபஸ் வாங்கி இருப்பர்!<br />இனி உங்களின் கருத்துகளை வரவேற்கிறேன்பாற்கடல் சக்திhttp://www.blogger.com/profile/07253897296826971596noreply@blogger.com6