பாற்கடல்...

இனியவை பிறக்கட்டும்...

கம்யூனிஸ்டுகள் மீதான ஊழல் குற்றச்சாட்டு - சமூகத்தின் புரிதல்

பதிவர் செம்மலர் அவர்களின் "கோவிந்தசாமியின் விலகலும், போலி கம்யூனிஸ்டுகளின் வேடமும்' என்ற இடுகைக்கு பதில் இடுகையாகவே இடப்படுகிறது. அவருக்கு பின்னூட்டம் இடலாம் என்றுதான் நினைத்திருந்தேன். சற்றே நீளும் எனத் தோன்றியதாலும், இதர "தோழர்'களை விவாதத்துக்கு அழைக்கவும் முடிவு செய்தே, இப்பதிவு இடப்படுகிறது. நான் ஒன்றும் கம்யூ.,க்களின் தீவிர எதிர்ப்பாளனோ, ஆதரவாளனோ அல்ல.
என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில், "கம்யூனிஸ்டுகள் நாம் நினைப்பது போல் இல்லை; அங்கும் ஊழல் மலிந்திருக்கிறது. எனவேதான் கோவிந்தசாமி என்ற தனி மனிதனும் விலகி, மற்ற கட்சியினரைப் போலவே நாங்களும் என நிரூபித்திருக்கிறார்' என்பதே, செம்மலர் அவர்களின் கருத்துப்பிழியல் என நினைக்கிறேன்.
அதை நேரடியாகவே அவர் சொல்லி இருக்கலாம். திருப்பூர் வாசி என்பதால், திருப்பூரின் இதர முகங்களையும் தொட்டுத்துலக்கி, தொழிலாளர் பிரச்னை என சுற்றி வளைத்து, கம்யூ.,க்களின் வேடத்தை உரிக்க நினைத்திருக்கிறார்.
அவர் சொல்வதில் சிறிது உண்மை இல்லாமல் இல்லை. ஆனால், இங்குள்ள முதலாளிகள் கட்டாயமாக எட்டு மணி நேரத்துக்கும் கூடுதலாக வேலை வாங்குகிறார்கள் என்பது வெளி உலகுக்கு சித்தரிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள சூழலில் எட்டு மணி நேர வேலை என்பது வெறும் பேச்சு மட்டுமே. அனேகமாக தோழர் செம்மலரும் (எந்தப் பணி செய்பவராக இருப்பினும்) எட்டு மணி நேரத்துக்கும் கூடுதலாகவே உழைப்பவராக இருப்பார். அதை அவரும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
//திருப்பூரில் எந்த தொழிலாளியும் கொத்தடிமை கிடையாது சொல்லப்ப்போனால்

எட்டுமணி நேரம் மட்டும் அல்லது பனிரெண்டு மணிநேரம் வேலை மட்டும்

என சொன்னால் வேலைக்கு சேராத தொழிலாளிகளைத்தான் இங்கு பார்கிறோம்

ஏன் இந்த நிலை என்றால் ஒரு நாள் இரண்டுநாள் ஓடி பார்த்தால்தான் இங்கு

இருக்கும் விலைவாசிக்கு வண்டி ஓட்ட முடியும் அதற்கு தகுந்தாற்போல

வீட்டு வாடகை மற்றும் விலைவாசி ஏறிவிட்டது .
///
பின் நிதர்சனத்தை மக்கள் பிரதிநிதி என்ற முறையில் வெளிப்படையாக சொன்னதற்காக அவருக்கு இந்த தண்டனை அவசியமா? கம்யூ.,க்கள் என்றாலே, 100 சதவீத வார்ப்புகளாக, நெகிழ்வுத் தன்மை இல்லாதவர்களாக இருக்க வேண்டும் என்று நாமாகவே அர்த்தப்படுத்திக் கொள்வது எவ்விதத்தில் நியாயம்?
///
லாஜிக் படி கோவிந்த சாமி செய்தது சரிதான் ஒரு வகையில் ஆனால்

கட்சி இதற்காக இவரை எச்சரிக்கவில்லை மாறாக அவர் வாங்கிய தொகையில்

கட்சியின் மாநில கமிட்டிக்கு பங்கு கொடுக்கவில்லை என்பதால் தூக்கியது.///
இந்தக் குற்றச்சாட்டை எந்த அடிப்படை ஆதாரத்தை வைத்து சாட்டினீர்கள் செம்மலர். பொத்தாம்பொதுவாக இக்குற்றச்சாட்டை நீங்கள் எப்படி வைக்க முடியும்? நீங்கள் சொல்வது போல் கம்யூ., கட்சியிலும் ஊழல் இருக்கிறது என்றே வைத்துக் கொண்டாலும், எரியும் கொள்ளியில் நல்ல கொள்ளி இவைதான். அப்படியே இருப்பினும் கட்சிக் கட்டுப்பாட்டை(!), கம்யூ., கட்சி என்றால் மக்கள் மனதில் இருக்கும் படிமத்தை உடைக்கும் விதத்தில் காசு வாங்கியவருடன் சமரசம் பேசச் சொல்கிறீர்களா என்ன?
/// போலி கம்யுனிஸ்டுகள் பேசுவதெல்லாம் சும்மா உருகி உருகி ஓடும் திருப்பூர்

வீதியில் திமுக காரன் அதிமுக காரன் எல்லாம் என்ன சொன்னாலும் தொழிலாளர்

மத்தியில் எடுபடாது அதே நேரத்தில் இந்த போலி தொழிற்சங்க வாதிகளும்

முதலாளிகளும் ஏமாற்றும் அப்பாவி ஜீவன்கள் தொழிலாளர்கள் தாம்.///
ஹா, திருப்பூர் என்ன கம்யூ.,க்களின் எஃகு கோட்டை என்றா நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அப்படி எதுவும் இல்லை. அ.தி.மு.க., தி.மு.க., காரன் சொன்னாலும் எடுபடும். கம்யூ.,க்கள் சொன்னால் எடுபடாமலும் போகும். இன்னும் இங்குள்ளவர்களின் மனப்போக்கை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. கம்யூ.,வில் வட்டார செயலாளராக இருந்து கொண்டு, தீவிர களப்பணி ஆற்றிக் கொண்டே, இரட்டை இலைக்கு எம்.பி., தேர்தலில் வாக்களித்தவர்கள் பற்றி எனக்கு நன்கு தெரியும் தோழரே.

எதற்காக இந்த பதிவை எழுதினேன் என்பதில் இன்னும் எனக்கு புரிதல் இல்லை. ஆனால், உங்களின் இறுதி சில வரிகள் நிச்சயம் ஆட்சேபணைக்கு உரியவை. அதற்கு பதிலளிக்கவே இந்த இடுகை. ஆனால், அசந்தர்ப்பமாக மேலே உள்ள கருத்துகளையும் சொல்லியாக வேண்டி இருந்தது.

///
மொத்தமா ஒரு சாதி ஆதிக்கத்தில் இருந்து திருப்பூர் விடுவிக்கப்படும் வரை

தொழிலாளர்கள் ஏமாற்றப்படுவது தொடரும்///
திருப்பூரில் சாதிய ஆதிக்கம் என்ற சேற்றை காரண காரியம் இல்லாமல் வீசியெறியாதீர்கள். எந்த நிறுவனத்தில் இன்ன சாதிக்காரன்தான் பணிபுரிய வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர். அல்லது குறிப்பிட்ட சாதிக்காக அதிக சம்பளம் கொடுக்கிறார்கள். திருப்பூர் வந்தேறிகளின் ஊர் என்பதை மறந்து விட்டு இது போன்ற சாதிய குற்றச்சாட்டை முன்வைக்காதீர்கள். எல்லாப் பகுதிகளிலும் ஏதேனும் ஒரு சாதியினர் அதிக எண்ணிக்கையில்தான் இருப்பார்கள். அந்த ஊரில் நீண்ட காலமாக வசிப்பவனிடம் செல்வம் அதிகம் இருக்கலாம்.
வடமாநில சேட்டுகளின் நிறுவனங்கள் எத்தனை இருக்கின்றன என்பது உங்களுக்கு தெரிந்து இருக்கும். இன்னும் சொல்வதானால், சிங்களவனுக்கு கீழே பணிபுரியும் பிறவிகளும் இங்கேதான் இருக்கிறார்கள்.
அதையும் நினைத்துப் பார்த்து விட்டு சாதிய ஆதிக்கம் திருப்பூரில் என்று குற்றம் சாட்டியிருக்க வேண்டும். ஏதேனும் ஒரு குறிப்பிட்ட சாதியின் மேல் தனிப்பட்ட கோபம் இருப்பின் அதை விட்டு விடலாம்.
சுந்தர ராமசாமி 1966லேயே சொல்லி இருக்கிறார் "கலைஞனின் சமூகப் பொறுப்புகளும், பொதுநல உணர்ச்சிகளும் பெரிதும் மிகைப்படுத்தப்பட்ட காலம் இது' என்று.
எழுதும் எழுத்தாளர்களுக்கு எல்லாம் சமூக பொறுப்புணர்வு இருக்கிறது என்ற போர்வையில் பொத்தாம்பொதுவாக குற்றச்சாட்டுகளை முன்வைப்பது அபத்தம். உங்களின் சாதியக் குற்றச்சாட்டை மறுபரிசீலனை செய்யுங்கள் தோழரே.

1 comments:

வணக்கம் நண்பரே.

இன்று வெயிலான் ரமேஷ் மூலம் தங்களைப் பற்றி அறிந்து கொண்டேன்.

ஜோதிஜி. தேவியர் இல்லம் திருப்பூர் வலைதளத்தில் எழுதிக் கொண்டு வருகின்றேன்.

ஒவ்வொன்றாக உங்கள் கருத்துக்களை படிக்க விரும்புகின்றேன்.

வாயப்பு இருந்தால் தொடர்பு கொள்ளவும்.

texlords@gmail.com

 

Post a Comment