பாற்கடல்...

இனியவை பிறக்கட்டும்...

உயிர்ச்சரடு

எனது இடது தோளில் பட்டுத் தெறித்தது
மூன்றாம் தளத்திலிருந்த
சாம்பற் புறாவொன்றின் எச்சம்
அந்த வெண்ணிற நீரிழையுள்
விதைகள் ஏதுமில்லை
இருந்தும் வேர் பரப்பியது.
இடக்கழுத்தின் நரம்பு துளைத்து,
வலச்செவி நுழைந்து,
நாசி வழிந்து,
முதுகெங்கிலும் படர்ந்து,
என்பு ஊடறுத்து,
நாபி துளைத்து,
குறி, குதம் எனப் பரவின வேர்கள்
அக்குளிலும், சிரசிலும்
மெல்லக் கிளைத்தது
மரமொன்று.
யுகம் யுகமாய்த் தொடர்ந்திருந்த
உயிர்ச் சரடு அறுந்ததையெண்ணி
விகசித்தன விருட்சங்கள்.

0 comments:

Post a Comment