பாற்கடல்...

இனியவை பிறக்கட்டும்...

பதிவுலகில் நான் எப்படிப்பட்டவன்?

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
பாற்கடல் சக்திவேல்.

2) அந்தப்பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
சக்திவேல் எனது பெயர்; பாற்கடல் வலைப்பூவின் பெயர்.

3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.
பசுமை பற்றி எழுத வேண்டும் என்று எண்ணி, குறிஞ்சித்திட்டு என்ற பெயர் தேடிப்பிடித்து வைத்திருந்தேன். பிறகு தம்பி சிந்தன், எப்படி வலைப்பூ துவக்குவது என்று சொல்லிக் கொடுத்தான். படிக்க நிறைய வாய்ப்பு; எழுதவும் நிறைய வாய்ப்பு. ஆனால், நான் 100 சதவீத சோம்பேறி என்பதால், இரண்டுமே முழுமையாக நடக்கவில்லை.

4)உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
பிரபலமா அப்டின்னா என்னங்க? நான் பிரபலமாயிட்டேன்னு யார் சொன்னாங்க?

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்துகொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
எதுவுமே சொந்த விஷயம் இல்லீங்க. திருடுனதுதான். பின்ன என்ன கேள்விங்க இது. யாருக்குமே சொந்த பாதிப்பு இல்லாம எழுத முடியாது. சில சமூக(!) கருத்துள்ளது எழுதினாலும், எங்கயாவது நாம உள்ள ஒளிஞ்சுருப்போம் இல்ல. அதனால.... சகலமும் கலந்திருக்கும்.

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
இதுவரைக்கும் ஏழு லட்சத்துக்கு நாப்பத்து நாலாயிரத்து முன்னூற்று இருபத்தி ஒரு ரூபாய் சம்பாதிச்சுருக்கேன். நிஜமா நம்புங்க. பதிவு எழுதறதே சம்பாதிக்கிறதுக்குத்தான். (நண்பர்களை சம்பாதிக்கலாம்.; அதற்கு விலை மதிக்க முடியுமா...அடடா)

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
ஐடியா முழுசா இல்லாததால, அடுத்தடுத்து மூணு துவக்கினேன். மூணுமே தமிழ்லதான்;பின்ன துரை இங்கிலீசெல்லாம் எழுதும்னு நினைச்சீங்களா?.
குறிஞ்சித்திட்டு, வழிப்போக்கன், பாற்கடல். தற்போது பாற்கடலில் மட்டும் நீந்திக் கொண்டிருக்கிறேன்.

8)மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
யார் நிறைய எழுதினாலும் பொறாமை வரும். கோபம் வந்திருக்கிறது; சில விவாதங்களைக் கேள்விப்பட்டு. ஊர சொன்னாலும் பேர சொல்லக்கூடாது. பிறகு, அவரும் அவர் சார்ந்தவர்களும் என்மேல் கோபப்படுவார்கள். (எங்களின் "தல' வெயிலான் அநியாயத்துக்கும் அப்டேட்ல இருக்கார். அவருக்கும் நேரம் பத்தக்கூடாதுன்னு கடவுள்ட்ட வேண்டிக்கறேன்)
9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாரட்டைப் பற்றி..
அடடா தினமும் லட்சக்கணக்கான பேர் பாராட்டுறதால, முதல்ல பாராட்டுனவங்க பேரு தெரியல. பதிவுகளை இடுவதற்கு முன், சிந்தனும், திருவும் பாராட்டினார்கள். பதிவுக்குப் பின், வந்த முதல் பாராட்டு பற்றி நினைவில் இல்லை.
நல்லவேளை திட்டுனவங்க லிஸ்ட் கேக்கல. சங்கதி அப்புறம் இல்ல தெரிஞ்சு இருக்கும்.
10)கடைசியாகவிருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...
ஹலோ கடைசியாகனா என்ன அர்த்தம்.? மங்கலம் பாடலாம்னு பாக்குறீங்களா?
எதையாவது சமூகத்துக்கு செய்யணும் நினைச்சு, எதுவுமே செய்ய முடியாத இளைஞன். ஆசிரியர், பத்திரிகையாளன்னு இரண்டு மிக விருப்ப துறைகள் இருந்தும், ஆசிரியராக ஒரு ஆண்டு பணியாற்றி விட்டு, எதையாவது செய்யலாமே என்று பத்திரிகை துறைக்கு வந்தவன். சொல்லிக் கொள்ளும்படி பெரிய அளவுக்கு சாதிக்காவிட்டாலும், சிலருக்காவது என், பணிகள் நன்மை பயந்தது உண்டு. அதற்காகவே இன்னும் பத்திரிகை துறையில் இருந்து விலகாமல் இருக்கிறேன். சில ஆண்டுகள் கழித்து, மீண்டும் தொடர் பதிவில் சந்திக்க நேரிடும் போது, நிச்சயம் அதீத திருப்தியுடன் உங்களைச் சந்திப்பேன்.

என்னை தொடர்பதிவுக்கு அழைத்த, "திருச்சொல்' திருநாவுக்கரசு நண்பருக்கு நன்றிகள் பல.
அடுத்ததாக நான் அழைக்க நினைக்கும் பதிவர், சிந்தன்(என் குருநாதனும் கூட. சின்னப் பையன் என்பதால், குருநாதருக்குப் பதில் குருநாதன்)

3 comments:

// எங்களின் "தல' வெயிலான் அநியாயத்துக்கும் அப்டேட்ல இருக்கார். அவருக்கும் நேரம் பத்தக்கூடாதுன்னு கடவுள்ட்ட வேண்டிக்கறேன் //

அடப்பாவி! ஏற்கனவே இப்படிச் சொல்லிக்கிட்டு நெறைய பேர் இருக்காய்ங்க. இப்ப நீங்க வேறயா? :)

 

//வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்துகொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
எதுவுமே சொந்த விஷயம் இல்லீங்க. திருடுனதுதான். பின்ன என்ன கேள்விங்க இது. யாருக்குமே சொந்த பாதிப்பு இல்லாம எழுத முடியாது. சில சமூக(!) கருத்துள்ளது எழுதினாலும், எங்கயாவது நாம உள்ள ஒளிஞ்சுருப்போம் இல்ல. அதனால.... சகலமும் கலந்திருக்கும்.//

உண்மை பிரதர்!!

 

திருப்பூர் வலைப்பதிவர்களுக்கு வணக்கம்,

நாங்களும் வலைப்பூ(தமிழ் கூறும்) நல்லுலகத்தில்
அடியெடுத்து வைத்து விட்டோம்.

அலைப்பேசியில் ஆலோசனைகள் வழங்கிய வாய்ப்பாடி குமார், வெயிலான் ஆகியோர்க்கு நன்றிகள். (அறிமுக உபயம்:வா.மு.கோமு-வின் நண்பர் மகேந்திரன்)

தட்டுத்தடுமாறி "தத்தகா, பித்தகா" என்று இரண்டு அடிகள் வைத்து விட்டோம்.இன்னும் சரியாக நடைப்பயில வரவில்லை, எப்படியாயினும்; உங்கள் உதவி அதிகம் தேவைப்படுகிறது. உதவுங்கள்.

வந்து பாருங்கள் bharathbharathi.blogspot.com
உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்...
நன்றி..

அன்புடன்...
எஸ்.பாரத்,
மேட்டுப்பாளையம்...

 

Post a Comment