
மின்னொடு வானம் தண்துளி தூவ,
கிள்ளைப் பார்ப்பின் மூக்கினை ஒத்த
செம்பரிதி அமிழும் காஞ்சனப் பொழுதில்,
வெரூப் பாலையின் பெரும்பசி வயிற்றோன்
கொள்ளும் கவளத்துட் சிறுபரல் போல்
இடறுமுன் நினைவை;
கொல்லேற்றின் ரணம் படர் கழுத்தை
அழுத்திச் சிவந்த நுகத்தடியதனை
இரையென விழுங்கி,
குறுமரம் சுற்றும் வனத்து அரவமாய்
செரித்திட நினைக்கையில்,
கிழியுதென் யாக்கை