பாற்கடல்...

இனியவை பிறக்கட்டும்...

தாழற்ற கழிப்பறை



கண்கள் மட்டும் தெரியும்
முகக் கவசமணிந்து,
கருநிறப் புரவியில் ஆரோகணித்து
வருவாய் என கற்பிதம் செய்திருந்தேன்.
நீயே முகத்துக்கு மட்டும்
கவசம் பூண்டிருந்தாய்.

கைக்குப்பதிலாக கொடுநாவில்
வைத்திருந்தாய்
வார்த்தைச் சாட்டைகளை.
எனக்காக உலகை விலை பேசுவாய்
என்றிருந்தேன்; நீயும் பேசினாய்
உனக்கான விலையை.

தொலைபேசி அழைப்புகளோடு
ஒப்பிடுகையில்,
என் கண்களின் அழைப்பை
கவனிக்க நேரமில்லை உனக்கு.
நின்று, நிதானித்து,
உள்ளுக்குள் பிரவகித்து,
உட்புகுந்து, வெளிவந்து,
எழுந்து, மூழ்க
வேண்டும் எனக்கு;

நீயோ
அவசர கதியில்
மென்று துப்பிவிடும்
வேகத்தில் இயங்குவாய்.
உனக்குள் ஏதோ ஒன்று
விழித்துக் கொள்ளும்போது
எனக்குள் ஒன்று
உடைந்து கொள்கிறது.

அந்த நேரங்களில்
தாழற்ற கழிப்பறையில்
இருப்பதாக
உணர்கிறேன் நான்.

7 comments:

very nice one specially the end. Good luck

 

//உனக்குள் ஏதோ ஒன்று
விழித்துக் கொள்ளும்போது
எனக்குள் ஒன்று
உடைந்து கொள்கிறது.

அந்த நேரங்களில்
தாழற்ற கழிப்பறையில்
இருப்பதாக
உணர்கிறேன் நான்.//

ஆஹா... ! நல்லதொரு உணர்வுக் (ஊமை) கவிதை.

 

தங்களின் வருகைக்கும், கருத்துப் பதிவிற்கும் நன்றி நண்பர்களே

 

Post a Comment