பாற்கடல்...

இனியவை பிறக்கட்டும்...

கேப்டன் போட்ட டாஸ்

சரியாய் இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஏறக்குறைய இதே தினத்தில் 23 /3 /2009 அன்று, லோக்சபா தேர்தல் நடக்கும் சமயம்; தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பற்றி ஒரு பதிவு எழுதி இருந்தேன்.
அப்போதைய நிலைக்கும், இப்போதைக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை. எனவே அதை மறு பதிவாக இடுகிறேன்.
சில விஷயங்கள் மாறுபடலாம். இருப்பினும் பதிவை மற்றவர்களின் பார்வைக்கு வைக்கிறேன்...





பச்சையான சந்தர்ப்பவாதம். வேறென்ன சொல்ல. வழக்கமான அரசியல்வாதிகளைப் போலத்தான் தானும்;திராவிடக்கட்சிகளுக்கு மாற்று என்பதெல்லாம் வெறும் பாவ்லா என்பதை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார் தே.மு.தி.க.,
தலைவர் விஜயகாந்த்.தான் சந்தித்த முதல் சட்டசபை தேர்தலில் 8 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று தமிழக அரசியலில் தன்னை
முன்னிறுத்திக் கொண்டார் கேப்டன்(!?). இளைஞர்களை கவரும் விதத்திலான எளிமையான பேச்சு; இரண்டாம் கட்ட தலைவர்கள் இல்லாத போதும்,
திராவிடக்கட்சிகளுக்கு மாற்று என தன்னைக் காட்டிக் கொண்ட விதம் என்பன போன்றவற்றாலும்; இதுவரை வாக்களிக்கச்
சென்றிடாத சில சதவீத வாக்குகள் பதிவான போது, அது தே.மு.தி.க.,வுக்கு என மாற்றிக் கொண்டதும் அரசியலில் விஜயகாந்தின்
வளர்ச்சிக்கு காரணங்கள்.உண்மையில் இவையெல்லாம் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வரைதான். லோக்சபா தேர்தல் என்பதால், தமிழகத்தில்
புறம்தள்ளி விட முடியாத ஒரு கட்சி போல் தெரிந்தாலும், என்னைப் பொருத்தவரையில் அவர் மக்கள் தன் மீது வைத்த
நம்பிக்கையை இழக்கச் செய்து விட்டார் என்றே தோன்றுகிறது.குறிப்பிட்ட காலங்களுக்கு பின்னும்(நான்கு ஆண்டுகள்) அதே முறையிலான அரசியல் பேச்சுகள் மக்களை சலிப்படையச்
செய்துள்ளது. கடந்த சட்டசபைக் கூட்டத் தொடர் நடந்து கொண்டிருந்த போது, குட்டிக் கோடம்பாக்கத்தில்(பொள்ளாச்சி) "மரியாதை' பட
ஷூட்டிங்கில் பிசியாக இருந்தார். சட்டசபை கூட்டத்தொடருக்கு செல்லவில்லையா என்ற நிருபர்களின் கேள்விக்கு "இப்போது
தொழிலுக்காக வந்துள்ளேன். அதைத்தான் பார்க்கப் போகிறேன்' என திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.தொழில் முக்கியம் என்பவர் ஏன் அரசியலுக்கு வரவேண்டும்?கோவை விமான நிலையத்தில் வழிமறித்த செய்தியாளர்கள் , இலங்கைப் பிரச்னை குறித்து கேள்வி எழுப்பியபோது, பதில் எதுவும்
சொல்லாமல், "தொழிலை கவனிக்கவே வந்தேன் வேறேதுவும் கேட்க வேண்டாம்' என மழுப்பினார்.எல்லோரையும் போல அவருக்கும் திடீரென விழிப்பு வந்தது. ஈழத்தமிழர்களுக்காக மத்திய மாநில அரசுகள் எதுவும்
செய்யவில்லை. எனவே, லோக்சபா தேர்தலை புறக்கணிப்போம் என அழைப்பு விடுத்தார்(யாருக்கு?).தமிழினத்தலைவர் என அழைத்துக் கொள்ளும் கருணாநிதி ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்து விட்டார் எனத்துவங்கி, அப்பா
என மரியாதையாய்(!) அழைத்து வந்த கலைஞரை கடுமையாக விமர்சித்தார்.இறுதி வரை தனியாகத்தான் போட்டியிடுவேன்; மக்களை மட்டுமே நம்புகிறேன் என்று கூறி வந்தவர்; டெல்லியில்
காங்.,மேலிடத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதை நீங்கள் படிக்கும் போது அனேகமாக கூட்டணி உறுதி செய்யப்பட்டிருக்கலாம். பா.ம.க., மட்டுமே இப்போது விஜயகாந்த்
கூட்டணியில் சேர்வதற்கான "செக்'.பா.ம.க.,வுக்கு எதிரணியில் சேர்வதுதான் கேப்டனின் திட்டம். இரட்டை இலக்கத்தில் சீட் கோரி வரும் விஜயகாந்த் தனியாக
போட்டியிடுவேன் என்ற வார்த்தை தர்மத்தை மீறி விட்டார். மற்ற கட்சியினரை ஒண்டிக்கு ஒண்டி அழைத்தவர், அரசியல்
சதுரங்கத்தில் தானும் மக்களை வெட்டுக் கொடுத்து, தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் சாதாரண அரசியல்வாதி என்பதை
நிரூபித்து விட்டார்.ஒரு திரைப்படத்தில், "நான் வருவேன், வரமாட்டேன்னு பூச்சாண்டி காட்ட மாட்டேன். வந்தா உறுதியா வருவேன்' என பிரபல
நடிகரை தாக்கி "பஞ்ச்' டயலாக் பேசியவர், இப்போது, கூட்டணி இல்லை; நான் தெளிவா இருக்கேன்; கூட்டணி பத்தி மூன்று
நாட்களில் சொல்வேன்' என விளக்கெண்ணை வாதம் பேசி வருகிறார்.கேப்டன் எடுக்கும் முடிவை பொருத்தே அவர் கட்சியின் எதிர்காலம்(!) அமையும் கூட்டணியா இல்லையா என்பதை டாஸ் போட்டு பார்ப்பாரா கேப்டன்?

2 comments:

சரியான நேரத்தில் ஒரு மீள் பதிவு.உங்கள் கருத்தோடு முற்றிலும் உடன்படுகிறேன்.ஒரு முக்கிய கட்டத்தில் மக்கள் திராவிட கட்சிகளின் மேல் மிகுந்த அதிருப்தியில் இருக்கும் இந்த நேரத்திலேயே இவர் தனியாக நிற்காமல் தன் கொள்கைகளை விட்டுக்கொடுத்து கூட்டணிக்குத் தயராகிறாரே..அடுத்த தேர்தலுக்குள் மக்கள் எதாவதொரு திராவிட கட்சியின் மீது ஆறுதல் அடைந்தவிட்டால் இவரின் நிலை........

 

இந்த‌ முறை என் ஓட்டு விஜ‌ய் காந்துக்குதான்,.. இல்லைனா அவ‌ர் மீண்டும் ந‌டிக்க‌ வ‌ந்திருவார்ல‌,..

 

Post a Comment